காலை 8மணி. நெல்லை சந்திப்பில் நின்ற அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஐந்து நிமிடம் நின்றுவிட்டு மீண்டும் புறப்பட்டது. ரெயில் சிக் புக் சிக்புக் என்று நகர்ந்தபோது கையில் பன்னுடன் பிளாட்பாரத்தில் சிறுமி…அம்மா அம்மா என்று அழுது கொண்டே ஓடிவந்தாள்..அந்த சிறுமியின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. அதன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கையில் வைத்திருந்த பன்னை சாப்பிடாமல் அங்கும் இங்கும் தேடியது.பின்னர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்து தண்டவாளத்தையே பார்த்து கொண்டிருந்தாள் அந்த சிறுமி. அடுத்த பதினைந்து நிமிடத்தில் […]
சென்னை நகரின் முக்கியமான பகுதியில் உள்ள வீட்டின் இரண்டாவது மாடி.. சந்துருவும் சியாமளாவும்..அந்த வீட்டுக்கு தனி குடித்தனம் வந்தார்கள்.அவர்கள் புது மண ஜோடி…சந்துரு என்ஜினீயர். நுங்கம்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்தார். சியாமளா..பி.எஸ்.சி படித்துள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு போனார் சந்துரு.மனைவி சியாமளா புன்னகை மலர வரவேற்றார்.சந்துரு..அந்த அன்பு மழையில் நனைந்து வீட்டுக்குள் போனான். தான் கொண்டுவந்த பேக்கை மனைவியிடம் கொடுத்தான். அந்த பையை ஆராய்ந்தார் சியாமளா. அதில்..அவருக்கு எந்த பொருளும் இல்லை. பாசமா. ஏதாவது வாங்கிட்டு […]
அந்த ஊரில் இருநூறு குடும்பங்கள் இருந்தன. அரசு பணியில் இருந்த பத்து குடும்பத்தினர் இருந்தார்கள். அவர்கள் மாடி வீடு கட்டி குடியிருந்தார்கள்.வீட்டுமுன் கார்,மோட்டார் சைக்கிள்கள் நின்றன. வீட்டில் பெரிய அளவு டி.வி. இருந்தது. எப்போதும் டி.வி.யில் படம் அல்லது பாட்டு காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும்.அந்த வீடுகள் செல்வ செழிப்பில் இருப்பது பளிச்சென்று தெரிந்தன. மீதி உள்ள வீடுகளில் நடுத்தரவர்க்கத்தினர் வசித்து வந்தனர். அன்றாடம் விவசாய வேலைக்கு சென்று வந்தார்கள். ஏழ்மை அவர்களின் வீட்டு வாசலில் குடியிருந்தது.அங்கு சோறு பொங்குவதற்கு […]
கபாலிக்கு அந்த தகவல் வந்ததும் ஆசை ஆட்டிப்படைத்தது.புதையல்…தங்க புதையல் அவர் மனம் அதையே நினைத்தது. காட்டுபகுதியில் உள்ள ஒற்றை ஆலமரம்…அதன் அருகில் நான்கடி ஆழத்தில் தங்க புதையல் உள்ளது என்றும் பவுர்ணமி பூஜை செய்து நரபலி கொடுத்து அந்த புதையலை எடுக்கவேண்டும் என்று மந்திரவாதி சொன்னபோது கபாலிக்கு கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருந்தது.ஆனால் மந்திரவாதி காட்டிய ஆசை கபாலியை அந்த திசையை நோக்கி நகர்த்தியது. என்னைக்கு பெரிய கோடிஸ்வரனாவது.. .புதையல் கிடைச்சா…வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம்…ஆனா இந்த நரபலி கொடுக்கிற சமாச்சாரம் […]
கோவில்பட்டியிலிருந்து சாத்தூருக்கு புறப்பட்டது… அந்த பஸ்.. எல்லா நிருத்தங்களிலும் நின்று செல்லும்..இந்த பஸ்சைவிட்டா ஒருமணி நேரம் கழிச்சுதான் அந்த ஊருக்கு செல்லவேண்டிய பஸ் வரும்.இதனால் பஸ்சில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள். பஸ் நிரம்பி வழிந்தது. கண்டக்டர் ..பாய்ந்து பஸ்சில் ஏறினார். உள்ளே போங்க, உள்ளே போங்க..வாசலில நிக்காதீங்க..என்று கத்தினார்.எங்கேய்யா போறது..கால்வைக்க கூட இடம் இல்லை.மூச்சுகூட விடமுடியல..உள்ளே போ..உள்ளே போன்னா எங்கய்யா போறது..என்றார் ஒருபாட்டி.உடனே கண்டக்டர்..கோபப்படாத. பாட்டி..கொஞ்சம் உள்ளே போ..இன்னும் ஆட்கள் ஏறணுமுல்ல..எல்லாம் கீழே நிக்காங்க..என்று மென்மையாக […]
சென்னை திருவான்மியூர் கடற்கரை ஓரம்…அலைகளின் கரங்கள்.. அங்கே நின்றவர்களின் கால்களை தொட்டு சென்றன.வாக்கிங் சென்ற சிலரும்..வாக்கிங்கை நிறுத்திவிட்டு அலைகளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அலைகள் நழுவி உள்ளே சென்றபோது…அந்த மஞ்சள் நிற சேலை…கடற்கரை மணலில் பரவிகிடந்தது. அருகில் சாய்ந்து கிடந்த நிலையில் கன்னிப்பெண் உடல்…முகம் சரியாக தெரியவில்லை.கார்மேக கூந்தல் முகத்தை பாதி மறைத்திருந்தது…வாக்கிங் வந்த முதியவர்..யார் அந்த பொண்ணு…என்னாச்சு..கடலில் குதிச்சிட்டா…இல்லை தவறி விழுந்துட்டா.. என்று அங்கு நின்றவர்களிடம் கேட்டார்.அதற்கு ஒரு பெண்..யாருக்கு தெரியும் பெரியவரே ….ஏதாவது காதல் பிரச்சினையோ..குடும்ப பிரச்சினையோ யாருக்கு […]
நகரின் பெரிய மார்க்கெட்… கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரே இரைச்சல்… காய்கறிகள் வேனில் வந்து இறங்கி கொண்டிருந்தன.அந்த மார்க்கெட்டின் வெளியே ஓரத்தில் காரை நிறுத்தினார் சாம்பசிவம். பெரும் பணக்காரர். ஆனால் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். பணக்காரர்கள் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து செல்வார். கையில் மோதிரம் கழுத்தில் தங்க சங்கிலி என்று பளபளப்பாக காட்சி தருவார். மற்ற இடங்களில் எளிமையாக இருப்பார். ஏன் என்றால் யாரும் பணம் கேட்டுவிடக்கூடாது என்ற முன் […]
தூத்துக்குடியில் இருந்து ரெயிலில் கணேசன் பயணம் செய்தான். கையில் ஒரு வார இதழை பிரித்து படித்தபடி தலை குனிந்தபடி இருந்தான்.கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்து கொண்டான். சூட்கேஸ் மீதும் அவனது கவனம் இருந்தது. ரெயில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அடுத்த ரெயில் நிலையம் வந்ததும் ஒரு டிப்டாப்வாலிபரும் ஒரு பெண்ணும் கணேசன் இருந்த பெட்டியில் ஏறினார்கள். அவர்கள் கையில் ஒரு பேக் மட்டும் இருந்தது. கணேசனுக்கு எதிரே அமர்ந்தார்கள். ஆங்கிலத்தில் ஏதோ அவர்களுக்குள் பேசிக்கொண்டே வந்தனர். கணேசன் […]
அந்த கடைவீதியில் போலீசார் வந்து குவிந்தார்கள்….துப்பறியும் மோப்ப நாய் விரைந்து வந்தது. கடைவீதியில் இருந்த வட்டிக்கடைமுன் மக்கள் கூட்டம்..அந்தகடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நூறு பவுன் நகைகளை கொள்ளையடித்திருந்தார்கள். நகைகளை அடகுவைத்தவர்கள் நகை போச்சே என்று அழுதுகொண்டிருந்தார்கள். இன்ஸ்பெக்டர் சலீம் காரில் வந்தார்.அடகு கடையை சுற்றிவந்தார்.எந்த கும்பலின் கைவரிசை இது…கையில் வைத்திருந்த லத்தியை சுழற்றியவாறு சிந்தனையை ஓடவிட்டார். அடகு கடைக்காரரிடம் விசாரணை நடந்தது. நைட்டு பத்து மணிக்கு கடையை பூட்டிவிட்டு போனேன்.. காலையிலே வந்துபார்த்தா […]
அந்த மலையடிவாரமே பரபரப்பாக இருந்தது .ராணுவவீரர்களின் கண்களில் தீப்பொறி பறந்தது.. .என்ன ஆச்சு…? ஏதாவது தகவல் கிடைத்ததா…?ராணுவ தளபதி அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார். ஐந்து நிமிடத்தில் தகவல் சொல்கிறோம் என்று பதட்டத்துடன் நின்றனர் அதிகாரிகள்.குயிக்… குயிக்… எல்லா இடத்திலேயும் தேடுங்க… நேரமாகிக்கொண்டிருக்கிறது. ..ஸ்கூலில் விசாரிச்சிங்களா. என்ன சொன்னாங்க. .. என்று கேட்ட ராணுவ தளபதி. பதிலுக்காக …அதிகாரிகள் முகத்தை பார்க்க.ஸ்கூல் முடிஞ்சு ராணுவ ஜீப்பில் சரியா நான்கு மணிக்கு புறப்பட்டு இருக்காங்க…இன்னும்வரல…வேறு தகவல் கிடைக்கல…என்று விழுங்கினார்கள்.வாட்…வாட்…எப்படி…எங்கே..என்று கடுகடுத்த […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022