கோவில்பட்டியில் ஜே. சி. ஐ.அமைப்பு மற்றும் ஆஸ்கார் கேட்டரிங் கல்லூரி இணைந்து 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள். பேரணியில் கேட்டரிங் மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணியை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தங்கையா தொடங்கி வைத்தார்.ஜே. சி. ஐ. தலைவர் வெங்கடேஷ் தலைமையில் பேரணி நடந்தது. ‘அனைவரும் வாக்களிப்போம்’ என்ற கோஷத்துடன் நடந்து சென்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு போலீசாரால் கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜாமீனில் வந்த ஜெயக்குமார் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் ஜெயக்குமாரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் – பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு உறவின் முறை சங்கத்தில் ஒரு பிரிவினர் பிரச்சினை ஏற்படுத்துவதாக கூறி இந்த ஆண்டு தெப்ப திருவிழா ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், மண்டகபபடிதாரர் நிகழ்ச்சி வழக்கம் போல் நடைபெறும் என்று கோவில் செயல் அலுவலருக்கு நாடார் உறவின் முறை சங்க தலைவர் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன் நேற்றுமதியம் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் – பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் ஒன்றான தெப்பத் திருவிழா இன்று மாலை கோவில்பட்டி நாடார் உறவுமுறை சங்கம் சார்பில் நடைபெறுவதாக இருந்தது,. இந்த நிலையில் சிலரின் இடையூறு காரணமாக தெப்ப திருவிழா ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்றபடி மண்டகபபடிதாரர் நிகழ்ச்சி வழக்கம் போல் நடைபெறும் என்றும் அறிவிக்கபட்டு உள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிசெல்வம், […]
தமிழ் புத்தாண்டு குரோதி வருடத்தை முன்னிட்டு கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் பொன் ஏர் பூட்டும் திருவிழா கொண்டாடப்பட்டது,. இதையொட்டி கிராமங்கள் விழாக்கோலம் பூண்டன கோவில்பட்டி கோட்டம் பிதப்புரம் கிராமத்தில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பசுக்கள், மற்றும் காளை மாடுகளை ஊரணிகளில் குளிப்பாட்டி கொம்புகளுக்கு மஞ்சள் பூசி, குங்குமமிட்டும், டிராக்டர்களை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் பூசியும், ரிப்பன் பலூன் கட்டியும் அலங்கரித்தனர். வீடுகளுக்கு முன்னால் பூஜை பொருட்கள், விதை, வித்துக்கள் வைத்து சூடமேற்றி […]
ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திற்குள் இன்று மாலை வட்டாட்சியர் சரவண பெருமாள், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி தொடங்கி வைத்தார். மூன்றாம் பாலினத்தினர் மற்றும் பேருந்து பயணிகளுக்கும், வாக்களிப்பதின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். வருவாய் ஆய்வாளர் ராம மூர்த்தி, ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன் ராஜா தொடர்ந்து துண்டு பிரசுரம் வழங்கி வந்தனர். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் […]
நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது. கோவில்பட்டியில் இன்று 13ம்தேதி நிழல் இல்லா நாளாகும். இந்திராநகர் சொர்ணா நர்சிங் கல்லூரியில் மாணவிகள் வட்டமாக நின்றும் தரையில் குச்சியை ஊன்றியும் நிழல் இல்லா நாளை சரியாக 12.19 மணிக்கு கண்டறிந்தனர். இதற்கான செயல்விளக்க […]
சீனாவில் இருந்து திருட்டுத்தனமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து விற்கப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களினால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. .ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை 20 தீப்பெட்டி விற்பனையை தடை செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையெடுத்து கடந்த ஆண்டு ரூ.20க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இருந்த போதிலும் […]
தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலும் ஒன்று. மதுரையில் மீனாட்சி அம்மன் அரசாட்சி செய்வது போலவே, இங்கும்அம்மனின் அரசாட்சிதான் நடைபெற்று வருகிறது. பழமையும் பெருமையும் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி திருவிழாவும் ஒன்று. 11நாள் நடைபெறும் இந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 5 -ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை […]
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் அடங்கிய கோவில்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு, திறந்த வேனில் இருந்தபடி தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022