கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வேதியியல் துறைத்தலைவர் முனைவர் பா.உமாதேவி மற்றும் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் (பொ) பா.மகேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தன்ர்,. தேசிய மாணவர் படை மற்றும் மாணவர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் ,தேசியக்கொடி ஏற்றினார்., முதல்வர் மூ.சுப்புலெட்சுமி கல்லூரிக் கொடி, வேதியியல் துறைத்தலைவர் பா.உமாதேவி […]
தொகுதி பங்கீடு: திமுக-காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் எந்த பிரச்சினையும் இல்லை-செல்வபெருந்தகை
சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. திமுக தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, […]
எடப்பாடி பழனிசாமியின் தகவல் உண்மைக்கு புறம்பானது; இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு விளக்கம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையாவது:- எடப்பாடி கே.பழனிசாமி தகவல் உண்மைக்கு புறம்பானது…. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தமிழக மக்களின் பேரன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மூத்த அரசியல் தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு 25.02.2026 ஆம் தேதி பிற்பகலில் வயது மூப்பு காரணமாக காலமானார். எதிர்கட்சித் தலைவர் அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த தவறியதன் மீது பொது மக்கள் மத்தியில் வினாவும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதற்கு எதிர்கட்சித் தலைவர் […]
ஐதராபாத் (காச்சிகுடா) மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து, அதனை நிரந்தர ரெயிலாக மாற்ற இந்திய ரெயில்வே வாரியம் முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே காச்சிகுடா-மதுரை இடையே திருவண்ணாமலை வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. எனினும், இந்த ரெயில் நிரந்தரமாக்கப்படாமல் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரெயிலை தூத்துக்குடி வரை […]
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி ராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் நடைபெறும் மாநில அளவிலான சப் ஜூனியர் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு விளையாட இருக்கிறது இதையொட்டி மாவட்ட அணி தேர்வு நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது தேர்வு பெற்ற வீரர்கள் இரண்டு நாள் பயிற்சி முகாம் நிறைவு பெற்று இன்று( வெள்ளிக்கிழமை) ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் அகிலாண்டபுரம் பஞ்சாயத்து […]
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மனைவி ஜாய்ஸ் (வயது 45). இவர் தூத்துக்குடி தெற்கு புதுத் தெருவில் உள்ள மாநகராட்சி T.D.T.A. நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 19-ம் தேதி ஜாய்ஸின் வகுப்பில் பயிலும் முதலாம் வகுப்பு மாணவி ஒருவர் சரியாகப் படிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, அந்த மாணவியைப் பிரம்பால் தாக்கியதில் மாணவியின் கையில் காயம் ஏற்பட்டது. பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி, தனது கையில் […]
கோவில்பட்டி கோ.வெ.நா கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிக்கு வணிகவியல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி ஆசியாபார்ம்ஸ் நிறுவன உரிமையாளர் பாபு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்வின் சிறப்பம்சமாக மஞ்சள் பைக்கு திரும்புவோம் என அனைவரும் உறுதி ஏற்றனர். இதனை தொடர்ந்து இளம் தொழில் முனைவோர் ஆர்த்தி, கேக் தயாரிப்பாளர் குளோரி, அழகுக்கலை நிபுணர். வித்யா குமார், மருதாணி கலைஞர் தாரணி, ஆராய்ச்சி மாணவர் தீபா மற்றும் தையல் கலைஞர் வீரலட்சுமி […]
முதலமைச்சருடன் சந்திப்பு: அதிமுக ஆட்சியில் 3 முறை முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்,
அ.தி.மு.க. ஆட்சியில் 3 முறை முதல்-அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பல சிக்கல்களை சந்தித்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் துணை முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். அதன்பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் அதிரடியாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தனர். இதனையடுத்து அ.தி.மு.க.வை மீட்க சட்ட நடவடிக்கை எடுத்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜனதா ஆதரவுடன் […]
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த திருப்பதி மகன் மனோஜ்குமார் (வயது 17). நேற்று இரவு மனோஜ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் அவர்களை நோக்கிப் பாய்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த கொடூர காட்சியை பார்த்து அங்கிருந்தவர்கள் தப்பியோடினர்., மனோஜ் தடுமாறிக் கீழே விழுந்து விட்டார். விரட்டி வந்தவர்கள் மனோஜை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர், ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோஜை அக்கம் […]
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சீனி முகம்மது நியாஸ் (19) மற்றும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தோஷ்குமார் (19) ஆகிய இருவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் […]







