இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இன் முதற்கட்டப் பணிகளான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, மற்றும் பொதுமக்களுக்கான இணையவழிச் சுய-கணக்கெடுப்பு (Self-Enumeration) முறையினைத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவில் முதன்முதலாக 1872-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வெவ்வேறான காலகட்டங்களில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1881 முதல் 10 வருடங்களுக்கு ஒருமுறை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு […]
விதிமீறல்கள் மற்றும் நிர்வாக காரணங்களால் தமிழகத்தில் பல்வேறு நகராட்சிகளுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெண்டர்களைக் கோரி அவற்றைச் சமர்ப்பிப்பதற்கு 1 முதல் 4 நாட்கள் வரை மட்டுமே குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த விதிமீறல் புகார்களை தொடர்ந்து, நிர்வாக காரணங்களுக்காக இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் … 40 சென்ட் நிலம் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோவில் இணை ஆணையர்… நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோவில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது. ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் தண்டபாணி சுவாமி மட நிலம் கடந்த 6-ந்தேதி […]
தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கோல்டன் நகரை சேர்ந்தவர் ஆஷிக்தனசிங் (வயது 26). இவர் மடத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கர்ப்பிணியாக… உள்ளதால், கடந்த 12-ந்தேதி மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதனால் இவரது வீடு பூட்டி கிடந்தது. சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கன்சு அதிர்ச்சி அடைந்த […]
கோவில்பட்டி மெயின் ரோட்டில் ஏற்கனவே இருந்த பெருந்தலைவர் காமராஜர் சிலை புதுப்பிக்கப்பட்டு புது பொலிவுடன் முழு உருவ வெண்கலை சிலையாக வடிவமைக்கப்பட்டு நேற்று நிறுவப்பட்டது. நடிகர் லெஜெண்ட் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் சிலையை திறந்து வைத்தார் காமராஜர் 124 வது பிறந்தநாள் அன்று திறந்து வைக்கப்பட்ட புதிய சிலைக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் . கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது.கருத்துரிமை […]
கோவில்பட்டி மின்பகிர்மானக் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஜூலை 18 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்பகிர்மான கழக செயற்பொறியாளர் எஸ்.பாபு தெரிவித்துள்ளார். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் வருமாறு :- கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம், கோவில்பட்டி உபமின் நிலையம் : கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் “இணைய பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் செயலர் பி.மகேந்திரன், முதல்வர், அ.பாண்டிராணி, இயக்குநர் பா.மகேஷ்குமார் ஆகியோர் வழிகாட்டுதலின் படி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் அ.பாண்டியராணி தலைமை தாங்கினார். சுயநிதி பாடப்பிரிவின் இயக்குநர் பா.மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் எப்.சஹாய ஜோஸ் கலந்துகொண்டு இணையவழி மோசடிகள், போலி இணைப்புகள் மற்றும் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெருந்தலைவர் காமராஜர் 124வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் லஞ்சம்,ஊழலுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது நகர தலைவர் அருண்பாண்டியன், வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜாராம், மாவட்ட பொது செயலாளர் ஐஎன்டியூசி ராஜாசேகரன், மாவட்ட […]
கோவில்பட்டி மெயின் ரோட்டில் அடைக்கலம் காத்தான் மண்டபத்தின் மேல் பகுதியில் நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் சிலை 23-11-1991 அன்று நிறுவப்பட்டது. ஒரு சிறுவன், சிறுமியை கரம் பிடித்து அழைத்து செல்வது போல் அமைந்த காமராஜர் சிலை நிறுவி பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது புதுப்பொலிவுடன் முழு உருவ காமராஜர் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா காமராஜர் பிறந்த தினமான இன்று ஜூலை 15 நடைபெற்றது. இதையொட்டி கோவில்பட்டி நகரம் […]
நாடு முழுவதும் கர்மவீரர் காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதியை கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது. தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப் பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி தின விழாவில் பள்ளி மாணவர்கள் காமராஜரின் மாஸ்க் அணிந்து பள்ளி முன்பிருந்து ஊர்வலமாக முக்கிய விதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் […]







