கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம், தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.. கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை மாணவி திவ்ய ஜோதி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி சமூக […]
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று தொகுதி பங்கீட்டு பெச்சுவார்த்தை நடத்தியது. தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக உடன் பேரம் பேசும் கட்சியாக நாங்கள் இருக்கமாட்டோம். தொகுதிப் பங்கீடு எங்கள் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும் என தெரியப்படுத்தினோம். எங்கள் கருத்துகளை கேட்டுக்கொண்டார்கள்; பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. புதுச்சேரியிலும் போட்டியிட வேண்டுமென கேட்டுள்ளோம். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுகவிடம் பேசவில்லை எண்ணிக்கை […]
சென்னை, நந்தம்பாக்கத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். நிதிநுட்ப நகரத்தில் 249 கோடி ரூபாய் செலவில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நிதிநுட்ப கோபுரத்தை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்,. விழாவில் அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டுக்கான என்னுடைய கனவு என்பது தனிப்பட்ட ஸ்டாலினின் கனவு மட்டுமல்ல; ஓட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகளை உள்ளடைக்கியதுதான் எனது கனவு. நூற்றாண்டுக்கு முன்பு திராவிட இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து […]
கோவில்பட்டி அருகே மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பாலகணேஷ் மேச் ஒர்க்ஸ் என்ற பெயரில் தீப்பெட்டி ஆலை உள்ளது. ஆலையின் ஒரு பகுதியில் குச்சி குடோன் உள்ளது. இன்று காலை ஆலையில் வழக்கம் போல் வேலை நடந்து கொண்டு இருந்தது. காலை 8 மணி அளவில் ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றி வரப்பட குச்சி மூட்டைகளை குடோனில் இறக்கி வைக்கும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர், அப்போது எதிரபாராதவிதமாக தீக்குச்சிகள் உரசிக்கொண்டதில் குடோனில் இருந்த குச்சி மூட்டைகளில் […]
குருவாயூர்-சென்னை எழும்பூர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- * கன்னியாகுமரியில் இருந்து வருகிற 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12666), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்று பாதை வழியாக ஹவுரா செல்லும். கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் செல்லாது. கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை, புதுக்கோட்டை வழங்கப்பட்டு உள்ளது. ] * […]
நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை யொட்டி 234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு திருச்சி மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர், இவர்களில் 117 பேர் பெண் வேட்பாளர்கள் கோவில்பட்டி தொகுதி வேட்பாளராக வக்கீல் பாண்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். வருகின்ற புதன் கிழமை 4.3.2026 அன்று நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி தொகுதி வேட்பாளர் வக்கீல் பாண்டி அறிமுக கூட்டம் மற்றும் சிறப்பு கலந்தாய்வு நடைபெற உள்ளது , கிழக்கு காவல் நிலையம் அருகில் உள்ள […]
கோவில்பட்டி விவேக் நர்சரி , பிரைமரி பள்ளி 33வது ஆண்டு விழா சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பள்ளி மற்றும் ராஜீவ் காந்தி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் காமராஜ் தலைமை தாங்கினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசு வழங்கினார். பள்ளி நிர்வாகி சுமதி காமராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர்,ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா இறுதியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
உத்தரபிரதேச மாநிலம் மோடிநகரில் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி 15 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் சீனியர் பிரிவில், முத்துப்பாண்டி ராஜா சிறந்த பளுதூக்குபவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூனியர் பிரிவில், ஆறுமுகபாண்டியன் மகாராஜா சிறந்த பளுதூக்குபவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் ருத்ராமயன் செல்வர் என்பவரும் பதக்கங்களை வென்றனர். பதக்கம் வென்று பெருமை தேடி தந்த வீரர்கள் அனைவரும் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டிற்காக சிறந்த பளுதூக்குதல் பயிற்சியாளர்களையும் பதக்கங்களை வென்றவர்களையும் கோவில்பட்டி உருவாக்கியுள்ளது. காமன்வெல்த் போட்டியில் தங்கம் […]
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தவெக செயல்வீரர்கள் கூட்டம் பசுவந்தனை ரோடு காமராஜர் அரங்கத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத் குமார், துணை பொதுச்செயலாளர் சுபத்ரா முருகன், மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் முருகன், மத்திய மாவட்ட செயலாளர், மாவட்ட தேர்தல் இணை கண்காணிப்பாளர் எஸ்.டி.ஆர்.சாமுவேல்ராஜ், நிர்வாகி வீரபாண்டி மகேஷ் உள்ளிட்டோர் விளக்க உரையாற்றினார் . மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கௌதமி, […]
சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் நடைபெற இருப்பதால் பொதுத்தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான அட்டவணையை தேர்வு துறை வெளியிட்டது. ஏப்ரல் மாதம் 2-வது வாரத்திற்குள் அனைத்து தேர்வுகளையும் முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு நாளை 2-ந்தேதி தொடங்குகிறது. 2-ந்தேதி தொடங்கும் பொதுத்தேர்வு 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் […]







