• May 1, 2024
கோவில்பட்டி

பிரதமர் மோடி மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார்

கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் க.தமிழரசன் தலைமையில் பலர் இன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பிரதமர் நரேந்திரமோடி மீது புகார் மனு அளித்தனர். அந்த புகாரில், “தேச ஒருமைப்பாட்டிற்கு பாதகமாகவும் மதவெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியும் தேர்தல், விதிமுறைகளையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராகவும் நடந்து கொண்டதாக பிரதமர்  நரேந்திர மோடி  மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. புகாரை சப் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே பொது கழிப்பிட முன் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து

சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் அறிவித்த போராட்டம் தொடர்பாக கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள் மே  9ந்தேதி அகற்றப்படும் என்று கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.  இந்த நிலையில் கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள நகராட்சி கழிப்பிடம் முன் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து, திடீரென கடை அமைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு புறம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோவில்பட்டி கோட்டாட்சியர் நடவடிக்கை […]

கோவில்பட்டி

வெயிலின் தாக்கத்தை குறைக்க தர்பூசணி, தண்ணீர் பழங்கள்; வட்டாட்சியர் வழங்கினார் 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி  உத்தரவின் பேரில் கோவில்பட்டி வருவாய்துறை மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து இன்று கோவில் பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவில் அருகே சாலை ஓர வாசிகள், மற்றும் பொது மக்களுக்கு வட்டாட்சியர் சரவண பெருமாள் தலைமை தாங்கி தர்பூசணி, குடி தண்ணீர், பாட்டில் வழங்கினார் நிகழ்ச்சியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தலைவர் தேன் ராஜா, வருவாய் ஆய்வாளர் ராம மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர், கிராம நிர்வாக அலுவலர் மந்திர […]

செய்திகள்

வேதியியல் விழா: பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வேதியியல் துறை சார்பாக பேராசிரியர் அப்பாஸ் அலி வேதியியல் மன்ற நிறைவு விழா மற்றும் வேதியியல் விழா-2024 நடைபெற்றது. துறைத்தலைவர் சுல்த்தான் செய்யது இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர், சபினுல்லாகான், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி, முதல்வர் முஹம்மது முஸ்தபா மற்றும் இயற்பியல்துறை தலைவர், முஸ்தாக் அஹமது கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக பெங்களூரு, ஐபிஎம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோட்டாட்சியர் தலைமையில் நடந்த  கூட்டத்தில் முடிவு 

கோவில்பட்டி நகரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 26ந்தேதி பட்டினி போராட்டம் நடத்த போவதாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து இருந்தனர். இதையடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜோன் கிறிஸ்டி பாய் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மே.9ந்தேதி கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றுவது , இன்று முதல் தற்காலிக கடைகளுக்கு உரிமைக் கட்டணம் வசூலிப்பதை […]

கோவில்பட்டி

செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருக்குறிப்பு தொண்டர் நாயன்மாருக்கு சிறப்பு அபிஷேகம்,  தீபாராதனை

கோவில்பட்டி  செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் திருக்குறிப்பு தொண்டர் நாயனார் மகா அபிஷேக விழா நடந்தது.  இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் ஒலித்த பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மூலவர் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் 63 நாயன்மார்களில் ஒருவரான திருக்குறிப்பு தொண்டர் நாயன்மாருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தன. விழாவில் ஸ்ரீ திருக்குறிப்பு […]

செய்திகள்

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சிங்கப்பூரில் நடத்திய ‘ஆற்றல் வளர்க்க விரும்பு’

தமிழ்மொழி விழா 2024இன் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ஜமால்  முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஏற்பாட்டில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில், 20 ஏப்ரல் 2024 அன்று “ஆற்றல் வளர்க்க விரும்பு!” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறந்த எழுத்தாளரும் தன்முனைப்பு பேச்சாளருமான முனைவர் வெ. இறையன்பு ஆற்றல் வளர்க்கும் வழிகளை கருப்பொருளாகக்  கொண்டு சிறப்புரையாற்றினார்.  ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வு மெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் உலக புத்தக தினம் கொண்டாட்டம்

இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் சார்பாக கோவில்பட்டியில் உலக புத்தக தினம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்திய கலாச்சார நட்புறவுக்கழக மாநில செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீ கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார்.  உலக புத்தகதினம் குறித்தும், புத்தக வாசிப்பை இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் க.கருத்தப்பாண்டி சிறப்புரை ஆற்றினார்.    நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் […]

கோவில்பட்டி

ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் புதிய கிளை தொடக்க விழா

கோவில்பட்டி இளையரசேனந்தல் ரோடு ஏஐ டி யு சி சுமைதூக்கும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கம் புதிய கிளை தொடக்க விழா கூட்டம் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட தலைவர் பரமராஜ்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலாளர் சரோஜா,நகர துணைச்செயலாளர் முனியசாமி ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினார்கள். ஏஐடியுசி சுமைதூக்கும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படடனர். சங்க தலைவராக வள்ளிராஜ், செயலாளராக முனியசாமி, பொருளாளராக […]

செய்திகள்

பூமி பாதுகாப்பு தினத்தில் மரக்கன்றுகள் நடும்பணி 

   மதர் சமூக சேவை நிறுவனம் ஆண்டு தோறும் பூமி பாதுகாப்பு தினத்தில்  விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி(இன்று )  பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு    காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு  மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார்.காயல்பட்டிணம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்  ப. கைலாச […]