• March 6, 2026
செய்திகள்

திமுக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது; தஞ்சை கூட்டத்தில் விஜய்

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக  நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று தஞ்சாவூர் அருகே நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில்  விஜய் பேசியதாவது: “ தமிழ்நாட்டின் உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம். நான் என்ன பேசினாலும் அதை திரித்து பேசுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு தீய சக்தி என்று சிறிய குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பித்துவிட்டனர் தமிழ்நாட்டு அணி, டெல்லி அணி என்று சொல்கிறார்கள். கிரிக்கெட்டில் கூட […]

தூத்துக்குடி

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்

சமூக சமத்துவத்திற்காகப் பாடுபட்ட அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா, இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20-ஆம் தேதி இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதி நோக்கி மாபெரும் அவதார தின ஊர்வலம் இன்று காலை தொடங்கியது. நேற்றைய தினமே திருச்செந்தூரில் உள்ள அவதார பதி மற்றும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சந்திர கிரகணம்: டெலஸ்கோப் மூலம் சிவப்பு நிலவை  பார்த்து வியந்த பொதுமக்கள்

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.இதனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது.இது ஒரு இயற்கையான நிகழ்வு ஆகும்.கிரகணங்கள் நிழல்களின் விளையாட்டு தான். இந்நிகழ்வு  மனிதர்கள், விலங்குகள், உணவு பொருள்களுக்கு எந்த தீங்கும்  விளைவிக்காது. அந்த வகையில் நேற்று சந்திரகிரகணம் ஏற்பட்டது,. இதையொட்டி தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அஸ்ட்ரோ கிளப்புக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் கருத்துக்களை பரப்புரை […]

செய்திகள்

தமிழகத்தில் ‘கேரளா ஸ்டோரி 2 ‘ திரைப்படத்தை வெளியிட சீமான் எதிர்ப்பு 

.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;- ”இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்! இசுலாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் நீட்சியாக கேரளா ஸ்டோரி-2 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.  ‘கேரளா ஸ்டோரி-1’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதித்தபோதே, அதனைக் கடுமையாக எதிர்த்து நாம் தமிழர் கட்சி […]

செய்திகள்

மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கியது திமுக

திமுக தலைமை கழகம் தலைவர் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்ப தாவது:- மாநிலங்களவைத் தேர்தல் – 2026 திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இன்று (3-3-2026) கலந்து பேசினர். இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. […]

செய்திகள்

திமுக -காங்கிரஸ் தொகுதி உடன்பாடு சிக்கல் தீருமா? முதலமைச்சர் ஸ்டாலினுடன் ப. சிதம்பரம்

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியில் ஒதுக்குவதில் இழுபறி நிலை நீடிக்கிறது. காங்கிரஸ்தொகுதி பங்கீட்டு குழுவினர் நடத்திய பேச்சு வார்த்தையில் கூடுதல் தொகுதிகள் கேட்பதால் திமுகவிடமிருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இன்று (3.3.2026) நேரில் சந்தித்துப் பேசினார்.  அதாவது திமுக – காங்கிரஸ் இடையே நிலவி வரும்  தொகுதிப் பங்கீடு குறித்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக […]

சினிமா

நகைச்சுவை படமாக உருவாகும்  ‘மாஸ்டர் பிளான்’- ஏப்ரலில் படப்பிடிப்பு தொடக்கம்

உத்ரா புரொடக்ஷன்ஸ் & டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர் பிளான்’ படத்தின் பூஜைநேற்று  (மார்ச் 2)) நடைபெற்றது. இப்படம் கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைப் போல அனைவரும் ரசிக்கும் வகையில் கலகலப்பான பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளது. படபூஜை விழாவில் தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், பி.எல் தேனப்பன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். புதிய […]

கோவில்பட்டி

மாசி மகம் : கழுகுமலை கோவிலில் குவிந்த பக்தர்கள்; மலையை சுற்றி கிரிவலம்

 கோவில்பட்டி அருகே  தென் பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் மாசி மகம் திருவிழாவை யொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு, உதயமார்த்தாண்ட அபிஷேகமும், திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காளசாந்தி பூஜைகள் நடந்தது. மதுரை, ராஜபாளையம், சிவகாசி, தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களி லிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  மலையை சுற்றி கிரிவலம் வந்து பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து கழுகாசலமூர்த்தியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் பால்குடம் […]

செய்திகள்

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்களுக்கான தேர்தல் (2026 முதல் 2029 வரை) உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது  இதில் சேகர் ஜெ   மனோகரன்  தலைமையிலான அணி வெற்றி பெற்று பதவியேற்றது இந்த அணியில் ஆக்கி யூனிட்  ஆப் தூத்துக்குடி  செயலாளர் முனைவர் குரு சித்ர சண்முக பாரதி மாநில தேர்தல் குழு தலைவர் ஆகவும்,  பொருளாளர் காளிமுத்து பாண்டி ராஜா மாநில ஆக்கி  போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் பதவி ஏற்றனர். இவர்களை  முன்னாள் மாநில ஆக்கி யூனிட் ஆப் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பசுமை, தூய்மை இயக்கம் கலந்தாய்வு கூட்டம்

கோவில்பட்டி பசுமை, தூய்மை  இயக்கம் சார்பாக கோவில்பட்டி சிதம்பர நாடார் காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொழிலதிபர் ரவி மாணிக்கம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில துணைத்தலைவர் அபிராமி முருகன் வரவேற்று பேசினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன்  கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார்.  ரோட்டரி சங்க  நிர்வாகி விநாயகா ரமேஷ், திருவள்ளுவர் மன்ற தலைவர்  கருத்தப்பாண்டி , வணிக சங்கத்தின்  மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் […]