• June 6, 2025
கோவில்பட்டி

கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதி தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேமுதிக சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி தொகுதிக்கு மாநில பொதுக்குழுஉறுப்பினர்  காளிதாஸ், விளாத்திகுளம் தொகுதிக்கு ஒன்றியசெயலாளர்  தங்கச்சாமி ஆகிய இருவரையும் மாவட்டசெயலாளர் சுரேஷ் மற்றும் மண்டல பொறுப்பாளர் எஸ்.எஸ் எஸ் சந்திரன் பரிந்துரையில் அறிவித்துள்ளார். இவர்களுக்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை வார்டு கழக செயலாளர்கள் நிர்வாகிகள் முழுஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொண்டுள்ளார்

தூத்துக்குடி

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடியில் ஐகோர்ட்டு உத்தரவை  மீறி கட்டணம் வசூல்; லாரி

மதுரை – தூத்துக்குடி . தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் நடுவது, நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் செடிகள் நட்டு பராமரிப்பது, கிராம சாலை தேசிய நெடுஞ்சாலையில் இணையும் பகுதிகளில் மின் விளக்குகள் அமைப்பது, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து பராமரிப்பு செய்ய வேண்டும். ஆனால் தனியார் நிறுவனம் முறையான பராமரிப்பு எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் ஒப்பந்தத் தொகையை விட கூடுதலான தொகையை தனியார் நிறுவனம் சுங்கச்சாவடி கட்டணம் மூலம் வசூல் செய்த விவரம் தகவல் […]

செய்திகள்

தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்கிறேன்; மு.க.ஸ்டாலின்

காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட `ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து சர்வதேச நாடுகளுக்குத் தெளிவாக விளக்குவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து  ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து வருகின்றன அதில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் ஒரு […]

செய்திகள்

த.வெ.க. சார்பில் 2ம் கட்ட கல்வி விருது விழா: விஜய் பங்கேற்பு

மாணவ, மாணவியரின் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆண்டு தோறும் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விருது வழங்கும் விழாவில் தமிழகம், புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் விருது, பரிசு பொருட்களை வழங்கி கவுரவித்து வருகிறார். அந்த வகையில், த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா […]

தூத்துக்குடி

குடும்ப அட்டை உறுப்பினர்கள் தங்கள் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும்; ஆட்சியர் இளம்பக்வத்

தூத்துக்குடி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுவரும் ஏஏஒய்ஃபிஹெச்ஹெச் குடும்ப அட்டைதாரர்கள் மொத்தம் 9,27,955 பேர் உள்ளனர். இவர்களில் இதுவரை 7,94,044 பேர் மட்டுமே கைரேகை பதிவு செய்துள்ளனர். மீதம் 1,33,547 பேர் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். அரசின் சலுகைகளைத் தொடர்ந்து பெற தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகைகளை பதிவு செய்வது அவசியம். வெளி மாவட்டங்களில் தங்கி புரிந்துவருவோர், பள்ளி, கல்லூரிகளில் படித்துவரும் மாணவர், மாணவிகள் தாங்கள் […]

செய்திகள்

திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் கனிமொழியை சத்தித்து வாழ்த்து பெற்றனர் 

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற  19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த 6 இடங்களில் 4 இடங்கள் தி.மு.க கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவர்.  இதில் திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்..கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  2ம் தேதி தொடங்கியது. திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று (3/6/2025) மத்திய அரசு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ நலத்திட்ட உறுப்பினர் அட்டை

கோவில்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான தாட்கோ உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி தலைவர் கா.கருணாநிதி  தலைமையில் நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளர் ஜெனிசிஸ் சியா, தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய உறுப்பினர் விஜயசங்கர், நகர்நல ஆ. அலுவலர் வசுமதி, துப்புரவு அலுவலர் இளங்கோ மற்றும் துப்புரவு ஆய்வாளர் இரா.ஆரியங்காவு ஆகியோர் முன்னிலை வகித்தனார்   கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி யின் போது 321 தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ நலத்திட்ட உறுப்பினர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கருணாநிதி 102 வது பிறந்த நாள் விழா

கோவில்பட்டி நகர திமுக சார்பில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழா நடந்தது. பேருந்து நிலையம் அருகே நடந்த விழாவில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் திமுக நகர செயலாளருமான கருணாநிதி தலைமை தாங்கி,  கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு வேஷ்டி – சேலை, இனிப்பு மற்றும் உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர்,சிவா,நகர அவைத் […]

சினிமா

கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை; கர்நாடக பிலிம் சேம்பர் தலைவருக்கு கமல்ஹாசன்

மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகி உள்ள, தக் லைப் திரைப்படம், வரும் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சென்னையில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், ‘தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்’ என்றார். இதற்கு கர்நாடகா முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. ‘கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், நடிகர் கமல், ‘மன்னிப்பு கேட்க முடியாது’ என கூறிவிட்டார். கர்நாடகாவில் கமல் படங்களுக்கு தடை […]

செய்திகள்

நீங்கள் வரலாற்று ஆய்வாளரா? கமல்ஹாசனுக்கு கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி

நடிகர் கமல்ஹாசன் ‘தக் லைப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம், நாளை மறுநாள் (5-ந்தேதி) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி’ என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கர்நாடக அரசியல்வாதிகள், கன்னட அமைப்புகள், கன்னட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். […]