• May 1, 2024
கோவில்பட்டி

அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில் தொடர் மின்தடை ; பொதுமக்கள் கடும் அவதி

 கோவில்பட்டி அடுத்த அப்பனேரி பஞ்சாயத்து வெங்கடேஸ்வரா கார்டன்வேகமாக முன்னேறி வரும் பகுதி.தற்போது சுமார் 200 வீடுகள் உள்ளன.தொடர்ந்து பல வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.  வீடுகள் பெருகும் அளவுக்கு இங்கு அடிப்படை வசதிகள்இல்லை என்றே சொல்ல முடியும்.மெயின் ரோட்டில் மட்டும் தார் சாலை உள்ளது. தெருக்கள் முழுவதும் கல் சாலைகள் மற்றும் மண் சாலைகளாகத்தான் உள்ளன.  இந்தப் பகுதியில் வடிகால் வசதி கிடையாது. பஞ்சாயத்து சார்பில் குடிநீர் சப்ளையையும் கிடையாது. குப்பைகள் அகற்றும் வசதியும் இல்லை. இதனால் காலி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சிறுவன் ஓட்டிய கார் விபத்து : பெற்றோர் மீது நடவடிக்கை உண்டா?

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக போலீஸ் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவது 199 (a)ன் படி குற்றமாகும்.  மீறினால் மேற்படி இளஞ்சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது. வாகனம் ஒரு வருட காலம் சிறை பிடிக்கப்படும். பெற்றோர்களுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதமும், 3 வாரம் முதல் 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் […]

தூத்துக்குடி

கோவில்பட்டி வாலிபரிடம் மதம் மாறினால் ரூ. 10 கோடி  தருவதாக கூறி ரூ.5

 கோவில்பட்டியைச் சேர்ந்தவாலிபர் ஒருவருக்கு IMO என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற ஐ. டி. யில் இருந்து தொடர்பு கொண்டு பேசியவர், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூ. 10 கோடி தருவதாக ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். மேலும் அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க, வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டடுள்ளார். அதனை நம்பி மேற்படி வாலிபர், அந்த நபருக்கு எதிரிக்கு ரூ.4,88,159/- பணத்தை ஜி.பே.மூலம் அனுப்பியுள்ளார். அதற்கு பின்னர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ; நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை 29-ந்தேதி தொடங்கி மே 8 -ந் தேதி வரை நடக்கிறது. கொடியேற்றம் 29-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் கொடியேற்று விழா நடக்கிறது. அன்றைய தினம் 1-வது நாள் மண்டகப்படிதாரர் நாடார் தேங்காய், பழம், காய்கனி வியாபாரிகள் சங்கம். இரவு 7 மணிக்கு கோவில் கலையரங்கத்தில், “வாரியாரும் வள்ளலாரும் “ என்ற தலைப்பில் முனைவர் சி.தேவி சொற்பொழிவு […]

கோவில்பட்டி

சங்கடஹர சதுர்த்தி பூஜை: சிறப்பு அலங்காரத்தில் ஓடைப்பட்டி வன்னி விநாயகர்

கோவில்பட்டியை அடுத்த ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை இன்று மாலை நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். அவருக்கு பல்வேறு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன, பூஜைகளை குருக்கள்  பிரசன்ன வெங்கடேஷ் செய்தார். தொடர்ந்து தீப ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.

கோவில்பட்டி

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின் பேரில் கோவில்பட்டி  துணை கண்காணிப்பாளர்  வெங்கடேஷ் மேற்பார்வையில்  மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர்  செந்தில்குமார் மற்றும் போலீசார் ஆலம்பட்டி மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், கோவில்பட்டி கடலைகார தெருவை சேர்ந்த  பாண்டிமணி (30),ரகுபதி (29) மற்றும் மந்திதோப்பு ரோடு பகுதியைச் […]

கோவில்பட்டி

சைக்கிள்,ஸ்கூட்டர் மீது மோதி மிட்டாய் கடைக்குள் புகுந்த கார்; கோவில்பட்டியில் பரபரப்பு

 கோவில்பட்டி மாதாங்கோவில் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இன்று காலை பஸ் நிலைய பகுதியிலிருந்து மெயின் ரோட்டில் வந்த ஒரு கார், மாதாங்கோவில் தெரு சந்திப்பில் சில வினாடிகள் நின்றது. பின்னர் அந்த கார், சாலையில் திரும்பியது.அப்போது மெயின் ரோட்டில் இருந்து பஸ் நிலையம் நோக்கி சென்ற ஒரு சைக்கிள் மீது லேசாக இடித்து விட்டு, மாதாங் கோவில் சாலையில் திருப்பத்தில் நின்ற ஒரு ஸ்கூட்டரை இடித்து தள்ளி விட்டு டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்த கார், தெரு […]

செய்திகள்

கொடைக்கானலில் அரசியல்வாதிகள் முகாம் ; முதல் அமைச்சர் ஸ்டாலின் 29-ந்தேதி வருகை 

 தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்குபடையெடுத்து வருகிறார்கள்.  மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் தற்போது வெயில் ஓரளவு அடித்தாலும் அங்கு ஜில் என்று வீசும் காற்று காரணமாக வெயில் கொடுமை தெரிவதில்லை.  இதன் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா முடிந்த நிலையில் அரசியல்வாதிகள் பலர் கொடைக்கானலில்  முகாமிட்டு உள்ளனர். அமைச்சர்கள் சிலர் இங்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வளர்ப்பு நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் நலனை உறுதி செய்வதில் கால்நடை மருத்துவர்களின் பங்கு முக்கியமானதாகும். கால்நடை மருத்துவர்களை கவுரவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை உலக கால்நடை மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது இதையொட்டி கோவில்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வளர்ப்பு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எட்வின் தலைமை தாங்கினார்.வனத்துறை அலுவலர்கள் பிரசன்னா, பாலகுமார் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடக்கம் 

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா இன்று (26 4 2024 )வெள்ளி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா கொடியை காமநாயக்கன்பட்டி பங்குத்தந்தை அருட்திரு அந்தோணி அ.குருஸ் அடிகளார் ,திருச்சி புனித பவுல் குருமடம் அருட்திரு ராஜேஷ் அடிகளார், கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் அடிகளார் மற்றும் இறைமக்கள் ஆகியோர் இணைந்து பங்கு தந்தையர் பங்களாவில் இருந்து பவனியாக எடுத்து  வந்தனர்.  உலகின் சமாதானத்திற்காக வெள்ளை நிற புறா […]