• June 8, 2025
செய்திகள்

தங்க நகை கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் ஏழை எளிய மக்களைப்

அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் […]

செய்திகள்

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது; தமிழகம், கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்கு

தமிழ்நாட்டில் மழைப் பொழிவுடன் தொடங்கிய கத்தரி வெயில் பின்னர் சுட்டெரிக்க தொடங்கியது. இதற்கிடையே, கடந்த 16-ந்தேதி முதல் லேசான மழைப் பொழிவு காணப்பட்டது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைபெய்து வெப்பத்தை தணித்தது. சில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை 27-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே அடுத்த 5 நாட்களில் அதாவது 25-ந்தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல்  கேரளாவில் தென்மேற்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாநில ஆக்கி: இன்று மாலை இறுதிப்போட்டி

கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் நடத்தும் 6 வது  ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. முதல் போட்டியை வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் நாகமுத்து தலைமையில் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் கமலேஷ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வீரர்களை யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி கிளப் செயலாளர் மாரியப்பன் அறிமுகம் செய்து வைத்தார் முதலாவது […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தாலுகாவின் 36-வது மாநாடு இனாம் மணியாச்சி தாமரை மஹாலில் நடந்தது. மாநாட்டுக்கு ரெங்கநாதன்,அந்தோணியம்மாள், ரஞ்சிதம் ஆகியோர் தலைமைக்குழுவாக செயல்பட்டனர். மாநாட்டுக் கொடியை மாவட்ட நிர்வாக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் ஏற்றினார். மாவட்ட செயலாளர் கரும்பன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தாலுகா செயலாளர் பாபு அறிக்கை சமர்ப்பித்தார். மாநாட்டில் 19 பேர் கொண்ட தாலுகாக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் தாலுகா செயலாளராக பாபு, துணைச் செயலாளர்களாக ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், பொருளாளராக மாரியப்பன் ஆகியோர் […]

செய்திகள்

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்

ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ஆம் தேதி சோதனை நடத்தினர். சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல  சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் புத்தக திருவிழா தொடக்கம்; 10 ஆயிரம் தலைப்புகளில் குவிப்பு

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவில்பட்டி வாசகர் வட்டம்,எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி புனித ஓம் கல்வி நிறுவனங்கள், ஆகியவை சார்பில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி மண்டபத்தில் 7ம் ஆண்டு புத்தக திருவிழா இன்று தொடங்கியது. ஜூன் -4ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் தாமோதரக் […]

கோவில்பட்டி

ராஜீவ்காந்தி நினைவு தினம்: கோவில்பட்டியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்த காங்கிரசார்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 34வது நினைவு தினம் இன்று (மே 21) கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு  கோவில்பட்டி நகர காங்கிரஸ் சார்பில் காந்தி மண்டபத்தில் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி காங்கிரஸ் கட்சி நகர  தலைவர் அருண்பாண்டியன், மாவட்ட துணை தலைவர் அய்யலுசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொறுப்பாளர்கள் பிரேம்குமார், காமராஜ், மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை […]

சினிமா

நடிகர் ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனு

நடிகர் ரவி மோகன்,  ஆர்த்தி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.  சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தன் மனைவி ஆர்த்தியிடம்  இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் ரவி மோகன்  வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் இருவரும் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சமரச தீர்வு மையத்திற்கு வழக்கை அனுப்பி வைக்கப்பட்டது.  சமரச மையத்தில் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது அவர்களுக்குள் […]

செய்திகள்

எனக்கும் அன்புமணிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை: டாக்டர் ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கடந்த 15, 16-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 மாவட்ட செயலாளர்கள், 11 மாவட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், 82 மாவட்ட செயலாளர்கள், 80 மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் கட்சிக்குள் தந்தை- மகன் இருவரிடையே கோஷ்டி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அரசியல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு எழுத்தாளர் கு.அழகிரிசாமி பெயர் வைக்க

கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்காவில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு மறைந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி பெயர் வைக்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை  மனுவை  முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் கிளை தலைவர் அபிராமி முருகன் தலைமையிலான குழுவினர்  கோவில்பட்டி நகர்மன்ற தலைவர கருணாநிதியை சந்தித்து வழங்கினர். இந்த குழுவில் சாகித்ய பால புரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் கா.உதயசங்கர், நகர் மன்ற உறுப்பினர் ஜோதிபாசு […]