• June 8, 2025
கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாநில ஆக்கிபோட்டி: முதலிடம் பெற்ற கூசாலிபட்டி அணிக்கு சுழற்கோப்பை- ரூ.20 ஆயிரம்

கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் சார்பில்  6 வது  ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது  இப்போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் இரண்டாவது நாளான நேற்று  காலையில் நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் அசோக் நினைவு ஆக்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் கோவில்பட்டி யங் […]

செய்திகள்

அமலாக்கத்துறை சோதனை பற்றி பிரேமலதா கருத்து

.தூத்துக்குடி விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜனவரி மாதம் கடலூரில் தேமுதிக மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்து மிகப்பெரிய அறிவிப்பு இருக்கும். அமலாக்கத்துறை சோதனை என்பது புதிதல்ல. நிச்சயமாக யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.   மக்கள் வரிப்பணத்தை லஞ்சமாகவும் ஊழலாகவும் செய்தால் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. ஆயிரம்  ரூபாய் திட்டம் என […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி போட்டி தொடக்கம்; ரசிகர்கள் உற்சாகம்

கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இன்று (23-ந்தேதி) தொடங்கியது. ஜூன் 1 ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி அளவில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், சென்னை இன்கம்டேக்ஸ் ஆக்கி […]

செய்திகள்

மத்திய நிதி மந்திரி  நிர்மலா சீதாராமனுடன் கடம்பூர் செ.ராஜூ சந்திப்பு

முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ  டெல்லியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை  இன்று சந்தித்தார் தீப்பெட்டி தொழிலை கடுமையாக பாதிக்கும் சீன லைட்டர்கள் மற்றும் உதிரி பாகங்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிசேரி கிராமத்தில் புதிதாக தேசியமயமாக்கபட்ட வங்கி தொடங்கியதற்கு  நன்றி தெரிவித்த கடம்பூர் ராஜு ,இனாம் மணியாச்சி மற்றும் செட்டிக்குறிச்சி பகுதியில் தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கிகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை […]

செய்திகள்

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில்,7 எம்.பி.க்கள் தலைமையில் மத்திய அரசு குழுக்களை அமைத்துள்ளது. இதில்  திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக மத்திய  அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான குழு இன்று (22/05/2025) ரஷியாவுக்கு புறப்பட்டனர். அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை […]

செய்திகள்

ரூ. 45 ஆயிரம் கோடி வேளாண் பட்ஜெட்டை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்  

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று காலை நடைபெற்றது. மாநில தலைவர் பூ. விசுவநாதன், தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் கோபிநாத் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:- *ரூ. 45 ஆயிரம்  கோடியில் அறிவித்த தமிழகத்தின் வேளாண் பட்ஜெட்டை காலதாமதப்படுத்தாமல் நிதிஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும் *சட்டசபை மாநில கோரிக்கையில் இடம் பெற்ற தடுப்பணைகள் நீரொழிங்கிகள், ஆறுகள், வாய்க்கால்கள், புனரமைப்புப் பணிகளை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் அரசு பஸ்கள்  நின்று செல்லக்கோரி, கோட்டாட்சியரிடம் காங்கிரஸ் மனு

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 3 மற்றும் 4 வது வார்டு சங்கரலிங்கபுரம் பகுதியில் அரசு பஸ்கள்  நின்று செல்ல வலியுறுத்தி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஜூன் 6ஆம் தேதி அப்பகுதி மக்கள் சார்பில் சாலை மறியல் செய்யப்போவாதாக கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனு அளிக்கும் நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன்,மாவட்ட பொதுச்செயலாளர் […]

செய்திகள்

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு […]

கோவில்பட்டி

காமநாயக்கன்பட்டியில் புறக்காவல் நிலையம் திறப்பு

தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமநாயக்கன்பட்டியில் காவல்துறை சார்பாக புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் போலீஸ் நிலையத்துக்குள் சென்று குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆல்பர்ட் ஜான் கூறியதாவது:- பொதுமக்களின் […]

செய்திகள்

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு; அமலாக்கத்துறை தகவல்

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே நடத்திய சோதனை அடிப்படையில் அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்தநிலையில் சமீபத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் சோதனை நடத்தினார்கள். அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தும் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதேபோல் சினிமா பட அதிபர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தினந்தோறும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். […]