தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஒன்றிய பொதுச்செயலாளர் வேல்முருகன் தலைமையில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. பகல்ஹாம் பயங்கரவாதிகளை ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது ராணுவம் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக ,ராணுவ வீரர்களையும், பாரத பிரதமரையும் பாராட்டி இந்த ஊர்வலம் நடைபெற்றது. ராஜீவ்நகர் இ பி காலனியில் தொடங்கி பிள்ளையார் கோவில் தெரு, ஆனந்த நகர், பிள்ளையார் கோவில் வடக்கு தெரு,மெயின் ரோடு ஆகிய […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய மாலை போட்டிகள் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று மாலை நடைபெற்ற 6வது லீக் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும் பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணியும் மோதின. இதில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலை பெற்றன. இந்தியன் வங்கி அணி வீரர் ஒய் ஆனந்த் […]
காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலும் குறித்து சர்வதேச நாடுகளுக்கு தெளிவாக விளக்குவதற்காக, அனைத்துக்கட்சி எம்.பிக்களை உள்ளடக்கிய 7 குழுக்கள் மத்திய அரசால் உருவாக்கப்பட்டன. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமையில் ஒரு குழுவினர் ரஷ்யா சென்றனர். மாஸ்கோ நகரில் ரஷ்ய கூட்டமைப்பின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரேருடென்கோவை இந்திய எம்.பிக்கள் […]
கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம் மைசூரு சாண்டல் என்ற பெயரில் பல்வேறு வகையான சோப்புகளை தயாரித்து விற்பனை செய்கிறது. மைசூரு சாண்டல் சோப்பு வியாபாரத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் அந்த நிறுவனம், பிரபல நடிகை தமன்னாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது.< 2 ஆண்டுகளுக்கு அவருக்கு ரூ.6.20 கோடி சம்பளம் வழங்க அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பணிக்கு கர்நாடகத்தை சேர்ந்த ஒரு நடிகையை தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் […]
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- * நிதிஆயோக் கூட்டத்தில், மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத உரிமைப் பங்கை வழங்க வேண்டும் […]
சென்னை சட்டப் பல்கலைக்கழக கோவில்பட்டி மாணவிக்கு கல்வி கட்டணத்துடன் ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு
சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை சட்ட பல்கலைக்கழகத்தில் படித்த கோவில்பட்டி மாணவிக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈதடியுடன் கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சார்ந்த பூஜா என்பவர் சென்னையில் ஒரு சட்டப் பல்கலைக் கழகத்தில் முதலாண்டு பயில சேர்ந்துள்ளார். இதற்கிடையில் அவருக்கு அரசின் ஸ்கூல் ஆப் எக்ஸ்செலன்ஸ் சட்டக் கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைத்ததால் அங்கு சேர்ந்துள்ளார். 70 நாட்கள் மட்டுமே சென்னையிலுள்ள சட்டப் […]
குற்றாலம் அருவிகளில் நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் குளிக்க ஏற்பாடு; போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். இந்த ஆண்டு சீசன் முன்கூட்டியே தொடங்கி விட்டது. குற்றாலம் பகுதிகளில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த அருவிகளில் குளிப்பதால் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் இதனால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்து […]
‘ஈ.டி.க்கும், மோடிக்கும் பயப்படமாட்டோம்’- தி.மு.க. அடிமை கட்சி கிடையாது; உதயநிதி ஸ்டாலின் பேட்டி
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், ‘யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு கிடையாது’ என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;- மாநிலத்திற்கான நிதியை கேட்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றிருக்கிறார். நாங்கள் ஈ.டி.க்கும்(அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுத்துக் […]
டெல்லியில் நடப்பு நிதி ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் இன்று நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றே டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டார். மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி செயல்பட்டு வருகிறார். […]
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படும் மாவட்ட மன நல திட்டம் மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மனச் சிதைவு தினம் கொண்டாடப்பட்டது, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்கானிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட மன நல திட்ட மருத்துவர் ஜோஸ்வா மனச்சிதைவு பற்றி பொது மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன்ராஜா, முன்னிலை வகித்து மன நலத்தை பற்றி பேசினார், பொது […]