• June 8, 2025
கோவில்பட்டி

கோவில்பட்டி மாலையம்மன் கோவில் பொங்கல் விழா; பால்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலம்

கோவில்பட்டி மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 9-ம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. 20-ம் தேதி கொடை சாட்டுதல் நடந்தது. விழாவில் தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், இரவு கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. விழாவின் 7-ம் நாளான இன்று பால்குட ஊர்வலம் நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்த குடங்களை எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் […]

கோவில்பட்டி

முதலமைச்சருக்கே தேர்தலை சந்திக்க பயம் வந்துவிட்டது”-கடம்பூர் ராஜு பேட்டி

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் ரூ.33 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், இனாம் மணியாச்சி கிராமத்தில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடந்தது.  முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு தலைமை தாங்கி, புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்.  முன்னதாக, மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் வைகாசி கொடை விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.தொடர்ந்து, அன்னதானத்தை […]

செய்திகள்

5-ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள அதிக சக்திவாய்ந்த போர் விமானமாக ரபேல் உள்ளது. இதை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா  வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்த ரபேல் போர் விமானம் என்பது 4 ம் தலைமுறையை சேர்ந்தது. தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே 5-ம் தலைமுறை போர் விமானத்தை தயாரித்துள்ளன. துருக்கி 5-ம் தலைமுறை விமானத்தை தயாரித்து சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியாவும் 5-ம் தலைமுறை விமானத்தை \ஏஎம்சிஏ திட்டம் மூலம் […]

செய்திகள்

த.வெ.க.பெண் நிர்வாகியை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த போலீசார்; திமுக அரசை கடுமையாக

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன.. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சென்று அங்கிருந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கினர். இதனைப் பார்த்த காவல் துறையினர், த.வெ.க. நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டினர். காவல் துறையினர் வரம்பு […]

கோவில்பட்டி

ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு

1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வரும் 2ம் தேதி (ஜூன்)  பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என்று  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும்,பள்ளி கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. *முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும், தாமதமின்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். *மதிய உணவு இடைவேளை முடிந்து சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும். *மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த […]

செய்திகள்

வினாத்தாள் கசிந்தது: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இன்றைய தேர்வு ஒத்திவைப்பு

தென் மாவட்டங்களில் முக்கியமான பல்கலைக் கழகமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி, குமரி, தூத்துகுடி உள்பட பல மாவட்டங்களில் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று “இன்டஸ்ட்ரியல் லா” என்ற பாடத்திற்கான தேர்வு நடைபெற இருந்தது. மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென “இன்டஸ்ட்ரியல் லா” பாடத் தேர்வு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக […]

கோவில்பட்டி

எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

கோவில்பட்டி, அருகே எட்டயபுரம் ராஜாமேல் நிலைப் பள்ளியில் 1999- 2000 வது கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வெவ்வேறு ஊர்களில் வேலை பார்க்கும் இவர்கள் மாணவ பருவத்தில் படித்த பள்ளிக்கு குறிப்பிட்ட நாளில் படையெடுத்து வந்தனர். 200க்கும் மேற் பட்டோர் 25 ஆண்டுக ளுக்கு பிறகு மீண்டும் சந்தித்து ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு கலாச்சார கலை, நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன மேலும் ஒவ்வொருவரும் தாங்கள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஆக்கிப்போட்டி : இன்றைய காலைப்போட்டியில் சென்னை இன்கம்டேக்ஸ்- தமிழ்நாடு லெவன் அணிகள்

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில், இலட்சுமி அம்மாள் நினைவுக்கோப்பைக்கான \அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் 23ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. காலையில் நடந்த போட்டி போட்டியின் ஐந்தாம் நாளான இன்று  27ம் தேதி காலை 7. மணி அளவில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் சென்னை இன்கம்டேக்ஸ் ஆக்கி அணியும், சென்னை தமிழ்நாடு லெவன் ஆக்கி அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை இன்கம் டேக்ஸ் ஹாக்கி அணி வீரர் நவீன் 25வது நிமிடத்தில் (பெனால்டி கார்னர்) […]

கோவில்பட்டி

15வயதுக்கு உட்பட்டோருக்கான ஆக்கி போட்டி: டாக்டர் அம்பேத்கர் பி அணிக்கு வெற்றிக்கோப்பை

கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பாக 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆக்கி போட்டி கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. போட்டியில்  ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் அம்பேத்கர் ஏ மற்றும் பி,அசோக் நினைவு ஆக்கி அணி கோவில்பட்டி ஆக்கி கிளப் செல்லையா ஆக்கி அகடமி ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டன லீக் மட்டும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன அரை இறுதிப் போட்டிக்கு டாக்டர் அம்பேத்கர் ஏ […]

கோவில்பட்டி

கோவில்பட்டி யூனியன் கிளப் சார்பில் வட்டார இறகுப்பந்து போட்டி

கோவில்பட்டி யூனியன் கிளப் சார்பில் வட்டார அளவிலான இறகுப் பந்து போட்டி நடந்தது. போட்டிகள் இரட்டையர் பிரிவு மற்றும் 40, 50 வயது ஆண்கள் இணைந்து ஆடும் இரட்டையர் போட்டி என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. ஆண்கள் இரட்டையர் இறுதி போட்டியில் டர்போ பேட்மிண்டன் கிளப்பைச் சேர்ந்த வீரர்கள் ஹரி விக்னேஷ் – சஞ்சய் முதல் பரிசுக் கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசு பெற்றனர். 2-வது இடம் பெற்ற சரவணா ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர்கள் ஜெயசான் […]