• June 8, 2025

அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை விழிப்புணர்வு பேரணி

 அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை விழிப்புணர்வு பேரணி

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இல்லந்தோறும் தேசிய கொடியேற்றிட மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை மற்றும் இணையதளம் மூலம் வீட்டிலிருந்தே தேசிய கொடியை பெற்றுக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளதை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக கோவில்பட்டியில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கோவில்பட்டி அஞ்சல் துறை சார்பில் நடந்த பேரணிக்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்  செ.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.. தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி எட்டயபுரம் சாலை வழியாக செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு நிறைவடைந்தது.

பேரணியில்  அஞ்சலக ஊழியர்கள், நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, சேதப்பற்றை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *