• June 8, 2025

சிவகங்கை மாவட்ட ஆட்சியரை மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகி சந்தித்து கோரிக்கை மனு

 சிவகங்கை மாவட்ட ஆட்சியரை மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகி சந்தித்து கோரிக்கை மனு

சிவகங்கை மாவட்டம்  ஆட்சியர் ஆஷா அஜீத்,  காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஷ் ஆகியோரை   மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

இளையான்குடி மகளிர் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். மேலும் பள்ளியின் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்று சுவர் எழுப்ப வேண்டும். மேலும் இப்பள்ளியை  25 வருடம் அரசு சாராமல் நிர்வகித்து வந்ததன் அடிப்படையிலும் ஏற்கனவே இப்பள்ளிக்கு சூட்டப்பட்டிருந்த தென்மலைக்கான் பெயரை  சூட்ட வேண்டும்

.இளையான்குடியில் இயங்கி வரும் அரசு பொது மருத்துவ மனையில் 6 மருத்துவர்கள் 12 செவிலியர்கள் 2 துப்புரவு பணியாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் 3 மருத்துவர்கள் 3 செவிலியர்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். அரசு கவனத்தில் கொண்டு அதிகப்படியான மருத்துவர்களும் செவிலியர்களும் துப்புரவு பணியாளர்களும் இடம்பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இளையான்குடி நகர பொருளாளர் உஸ்மான்,  உமர் உடன் இருந்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *