• June 8, 2025

நிலச்சரிவு: மூனாறு-கொச்சி சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன

 நிலச்சரிவு: மூனாறு-கொச்சி சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டன. நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. மண்ணில் புதைந்தவர்கள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட உடல்களை மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் மூணாறு-கொச்சி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ராட்சத பாறைகள் உருண்டு சாலைகளில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பல  மணிநேரம் பாதிக்கப்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

போலீசார் மற்றும் தீயணைப்பு துரையினர் சம்பவ இடம் வந்து சாலையில் விழுந்து கிடந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்,


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *