தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது செம்மொழி நாளாக கொண்டாடப்படும் இந்நாளில் திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் தலைமையில் கோவில்பட்டி 22 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி ஏற்பாட்டில் பங்களா தெருவில் அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ […]
தமிழக சட்டசபையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்காக தமிழக ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக விதிமுறைகள் இயற்றப்பட்டு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஆதார் எண்ணை இணைத்ததுடன் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. ‘ஜன நாயகன்’ படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் […]
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் இன்று செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். கருணாநிதியின் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினார். அவருடன் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், நிர்வாகிகள் […]
தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (2.6.2025) நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 472 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 36 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு […]
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கடந்த ஆண்டு பெய்த பெருமழையில் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு அரசு அறிவித்த வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தி இன்று கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெள்ளத்துரை பாண்டி, அவைத்தலைவர் வெங்கடசாமி, மாவட்ட துணைத் தலைவர் சாமியா, ஓட்டப்பிடாரம் வட்டாரத் தலைவர் தொப்பத்துரை மற்றும் […]
இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விக்ரம் சுகுமாரன். ‘ஆடுகளம்’ படத்தில் வெற்றிமாறனுக்கு துணையாக இருந்தார். அதனை தொடர்ந்து, ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் விக்ரம் சுகுமாரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின், 6 ஆண்டுகள் கழித்து நடிகர் சாந்தனுவை வைத்து ‘ராவணக்கோட்டம்’ என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில், நேற்று மதுரைக்குச் சென்று தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்துக்கான கதையை சொல்லிவிட்டு பேருந்தில் ஊர் திரும்பும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு […]
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். இதுகுறித்து மறுநாள் கோட்டூர்புரம் போலீசில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். ஞானசேகரன் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் வரலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஐ.பி.எஸ். அதிகாரிகள் சினேகபிரியா, பிருந்தா, ஐமான் […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் கே. இராமசாமி பிறந்தநாள் கோப்பைக்கான மாநில அளவிலான சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி வருகிற 4 ந் தேதி முதல் 8 ந்தேதி வரை கோவில்பட்டியில் நடக்க உள்ளது. கே ஆர் கலைக்கல்லூரி மைதானம், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானம், கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானம் ஆகிய 3 இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளனமொத்தம் 33 அணிகள் […]
கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு வள்ளுவர் நகர் 1வது தெருவைச் சேர்ந்த பிரகதீஸ் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், பிரகதீசை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத பிரகதீஸ் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை ஓட விடாமல் இருவர் பிடித்துக் கொள்ள மற்றவர்களால் வெட்டப்பட்டார். இந்த காட்சியை கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் பதறிப் போனார்கள். இருந்தாலும் […]