• June 4, 2025

Month: June 2024

கோவில்பட்டி

மூத்த குடிமக்களுக்கான ரெயில் டிக்கெட்  சலுகைகளை மீண்டும் வழங்ககோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார், செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி ரவிக்குமார், மருதம் மாரியப்பன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அபிராமிமுருகன், ஐ.என்.டி.யு.சி.ராஜசேகரன், […]

கோவில்பட்டி

தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வலியுறுத்தல்

கோவில்பட்டி வ உ சி நகரில் உள்ள மருத்துவ சமுதாய முடிதிருத்துவோர் தொழிலாளர் சங்க அலுவலக கட்டிடத்தில் தியாகி விஸ்வநாத தாஸ் 138 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மாரிமுத்து ,பொருளாளர் கருமாரிஸ்வரன், துணைச் செயலாளர் பூமிநாதன், நிர்வாக குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, குமார், வீர தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர் கட்சி மாவட்ட தலைவர் ஜெயபால், சண்முகையா ஆகியோர் முன்னிலை வகுத்தனர். துணைத் தலைவர் முருகன் […]

கோவில்பட்டி

சமூக தணிக்கை வழிநடத்தும் குழுவிற்கான பயிற்சி

தமிழகம் முழுவதும்  செயல்படுத்தப்படும் எம்ஜி ஆர் சத்துணவு திட்டத்தினை சமூக தணிக்கை செய்வதற்கான சமூக தணிக்கை வழி நடத்தும் குழுவிற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.தென் திருப்பேரையில் நடந்த பயிற்சி முகாமிற்கு ஆணையாளர் பாக்கிய லீலா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன்,வட்டார வள பயிற்றுநர்ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகதணிக்கை வட்டார வள பயிற்றுநர்சிவகுருநாதன் கலந்து கொண்டு சத்துணவு திட்ட சமூக தணிக்கை குறித்து பயிற்சி அளித்தார். இதில் மாணவர்களின் பெற்றோர்கள்,சுய உதவிக் குழு உறுப்பினர்கள்,சமூக […]

கோவில்பட்டி

பாண்டவர்மங்கலம் ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு  

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்றத்தின் சிறப்பு கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்  கவிதா அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பாண்டவர்மங்கலம் ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது , பாண்டவர்மங்கலம் ஊராட்சி தொடர்ந்து ஊராட்சியாகவே நீடிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி உடன் இணைக்கப்பட்டால் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்படுவது மட்டுமின்றி, வீட்டு வரி,  குடிநீர் கட்டணங்கள் உயர்ந்து விடும், தேசிய ஊராட்சி […]

செய்திகள்

எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும்; மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளது. மொத்தம் இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து 10 மற்றும் 12 வது வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற  800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்ந்து கொண்டனர், […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அரசு அலுவலக வளாக சாலை சீரமைக்காததை கண்டித்து தமாகா போராட்டம்

கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் வேலை நாட்களில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முதல் அரசின் கடைநிலை ஊழியர்கள் வரையிலும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் என தினமும் சுமார் 5 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.  இங்குள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமாகா சார்பில் மனுக்கள் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்தவித தீர்வும் காணப்படவில்லை. இதற்கிடையே […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஆக்கி கிளப்  செயலாளர்கள், மூத்த வீரர்கள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட அனைத்து கிளப்   செயலாளர்கள் மற்றும் மூத்த வீரர்கள் சிறப்பு ஆலோசனை கூட்டம்  கோவில்பட்டி பயணியர் விடுதியில் நடைபெற்றது. பிளிப்ஸ் ஆக்கிகிளப் செயலாளர் கண்ணுசாமி வரவேற்புரை ஆற்றினார்.  பாண்டவர்மங்கலம் ஆக்கிகிளப் செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். பூமாரி முருகேசன், அம்பேத்கர் ஆக்கிகிளப் செயலாளர் பிலிப்குமார்,கிருஷ்ணா ஆக்கிகிளப் பழவேசம்,யங்சேலஞ்சர்ஸ் ஆக்கிகிளப் செயலாளர் பசுபதி ஆகியோர் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் மாவட்ட ஆக்கி லீக் போட்டிகள் நடத்திட மாநில நிர்வாத்திடம் ADHOC கமிட்டி அமைத்திட வேண்டி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஏசியா பார்ம்ஸ், பிரவின் ஹோண்டாவில் ஜே. காம்.  ஸ்பாட்லைட் நிகழ்ச்சி

 கோவில்பட்டி ஜே சி ஐ அமைப்பின் ஒரு அங்கமாக திகழும் ஜே.காம் சார்பில் தொழில் நிறுவனங்களில் ஸ்பாட் லைட்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் கோவில்பட்டியில் உள்ள ஏசியாபாம்ஸ் நிறுவனத்தில் நடந்த ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.  ஏசியாபார்ம்ஸ் நிறுவனர் பாபு பேசுகையில் கூறியதாவது,:- எங்கள் ஏசியாபார்ம்ஸ் நிறுவனத்தில் மருத்துவமனை, பார்மசி, ஓட்டல் கல்வி நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற எல்லா வகையான நிறுவனங்களுக்கும் தேவையான 14 வகை பில்லிங் ரோல்கள் தயாரிக்கிறோம். […]

செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்எல்ஏக்கள்

 கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசு கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை எழும்பூர் ராஜாராத்தினம் ஸ்டேடியம் அருகில் அ. தி. மு. க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை 9 மணிமுதல் அடையாள   உண்ணா விரத அறப்போராட்டம் தொடங்கினார்கள். மாலை 5 மணி வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.  அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி  பழனிசாமி […]