மூத்த குடிமக்களுக்கான ரெயில் டிக்கெட் சலுகைகளை மீண்டும் வழங்ககோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார், செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி ரவிக்குமார், மருதம் மாரியப்பன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அபிராமிமுருகன், ஐ.என்.டி.யு.சி.ராஜசேகரன், […]