• June 6, 2025

கோவில்பட்டி ஏசியா பார்ம்ஸ், பிரவின் ஹோண்டாவில் ஜே. காம்.  ஸ்பாட்லைட் நிகழ்ச்சி

 கோவில்பட்டி ஏசியா பார்ம்ஸ், பிரவின் ஹோண்டாவில் ஜே. காம்.  ஸ்பாட்லைட் நிகழ்ச்சி

 கோவில்பட்டி ஜே சி ஐ அமைப்பின் ஒரு அங்கமாக திகழும் ஜே.காம் சார்பில் தொழில் நிறுவனங்களில் ஸ்பாட் லைட்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

 அந்த வகையில் கோவில்பட்டியில் உள்ள ஏசியாபாம்ஸ் நிறுவனத்தில் நடந்த ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.

 ஏசியாபார்ம்ஸ் நிறுவனர் பாபு பேசுகையில் கூறியதாவது,:-

எங்கள் ஏசியாபார்ம்ஸ் நிறுவனத்தில் மருத்துவமனை, பார்மசி, ஓட்டல் கல்வி நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற எல்லா வகையான நிறுவனங்களுக்கும் தேவையான 14 வகை பில்லிங் ரோல்கள் தயாரிக்கிறோம். மேலும் ஏசியா கேண்டி சார்பில் 31 வகையான கடலை மிட்டாய் மற்றும் அவல் மிக்சர் போன்றவை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம் 

புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயை அஞ்சல் அலுவலகத்துடன் கொண்ட உடன்படிக்கையின்படி இந்தியா முழுவதும் கொண்டு செல்கிறோம். சமீபத்தில் ஒரு கிலோ எடையில் பக்கெட்  கடலை மிட்டாய் அறிமுகம் செய்துள்ளோம். 100 ரூபாய்க்கு மேல் கடலை மிட்டாய் ஆர்டர் செய்தால்(93421 58681) கோவில்பட்டியில் இலவச டோர் டெலிவரி செய்கிறோம்.

இவ்வாறு ஆசியாபார்ம்ஸ் பாபு கூறினார்.

நிகழ்ச்சியில் ஜே. காம் தலைவர் உதயலட்சுமி, ஜே. சி. ஐ. சேர்மன் வெங்கடேஷ், பேபிஸ் பேரடைஸ் கண்ணப்பன், பிரவின் ஹோண்டா ஷோரூம் உரிமையாளர் பிரவின், கைரா டெக்னலாஜிஸ் எம். செல்வலட்சுமி, அபிராமிகுரூப்ஸ் ஷியாம் சுந்தர், லைட் வேர்ல்ட் தினேஷ் பாபு, நிக்கி பேக்ஸ் செல்வி, பெதர்டச் டிஜிட்டல் பிரிண்டிங் சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பத்மா பாபு நன்றி கூறினார்.

பிரவின் ஹோண்டா ஷோரூம் 

கோவில்பட்டி பிரவின் ஹோண்டா ஷோரூமில் நடந்த ஜே. காம் ஸ்பாட் லைட் நிகழ்ச்சியில் உரிமையாளர் பிரவின் கூறியதாவது :-

20 வருடமாக இந்த துறையில் இருக்கிறேன். 2018 முதல் ஹோண்டா மெயின் டீலராக உள்ளேன். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் செய்வதில் எந்த குறையும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

எங்களிடம் 20 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஆண்டுக்கு 1200 வாகனங்கள் விற்பனை ஆகின்றன. வாகன சர்வீஸ் வெளிப்படை யாகவே நடக்கிறது. ஒரு நாளைக்கு 65 வாகனங்கள் வரை சர்வீஸ் செய்து தருகிறோம்.

வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்யும்போது ராசாயன திரவத்தால் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு ஆடடோமேட்டிக் சர்வீஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. கோவில்பட்டியில் வேறு எங்கும் இந்த வசதி கிடையாது.

இவ்வாறு பிரவின் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *