• June 6, 2025

சமூக தணிக்கை வழிநடத்தும் குழுவிற்கான பயிற்சி

 சமூக தணிக்கை வழிநடத்தும் குழுவிற்கான பயிற்சி

தமிழகம் முழுவதும்  செயல்படுத்தப்படும் எம்ஜி ஆர் சத்துணவு திட்டத்தினை சமூக தணிக்கை செய்வதற்கான சமூக தணிக்கை வழி நடத்தும் குழுவிற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.தென் திருப்பேரையில் நடந்த பயிற்சி முகாமிற்கு ஆணையாளர் பாக்கிய லீலா தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன்,வட்டார வள பயிற்றுநர்ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகதணிக்கை வட்டார வள பயிற்றுநர்சிவகுருநாதன் கலந்து கொண்டு சத்துணவு திட்ட சமூக தணிக்கை குறித்து பயிற்சி அளித்தார்.

இதில் மாணவர்களின் பெற்றோர்கள்,சுய உதவிக் குழு உறுப்பினர்கள்,சமூக ஆர்வலர்கள்,பணி நிறைவு பெற்ற அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடிபுதூர்,கயத்தார்,உடன்குடி,ஆழ்வார் திருநகரி, சாத்தான்குளம் கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பயிற்சி முகாம் நடந்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *