தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வலியுறுத்தல்

கோவில்பட்டி வ உ சி நகரில் உள்ள மருத்துவ சமுதாய முடிதிருத்துவோர் தொழிலாளர் சங்க அலுவலக கட்டிடத்தில் தியாகி விஸ்வநாத தாஸ் 138 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
சங்கத் தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மாரிமுத்து ,பொருளாளர் கருமாரிஸ்வரன், துணைச் செயலாளர் பூமிநாதன், நிர்வாக குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, குமார், வீர தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர் கட்சி மாவட்ட தலைவர் ஜெயபால், சண்முகையா ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
துணைத் தலைவர் முருகன் அறக்கட்டளை துணைத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். உறுப்பினர்கள் சண்முகராஜ்,காளிராஜ், ராமலிங்கம், செந்தில்குமார், சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், மனோகரன், சண்முகையா, மயில்வாகனம், மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தியாகி விஸ்வநாத தாஸ் திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
*தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும், *தியாகி விஸ்வநாத தாஸ் நினைவாக அஞ்சல் தலை வெளியிட வேண்டும்,
*மருத்துவ சமுதாயத்தை படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், இலவச வீடு கட்டி தர வேண்டும்,,
*தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும.
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் சங்க ஆலோசகர்கள் முத்து மாரியப்பன் முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.
