தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகள், கோரிக்கைகளுக்கு பதில் அளித்து ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 181.16 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. பாபநாசம் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 71.528 கனஅடியாகஉள்ளது. நீர்தேக்கத்திலிருந்து வெளியேறும் அளவு 300 கன அடியாக உள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- போட்டித் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் “டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 பிரிலிம்ஸ் -2025” தேர்வுக்கு இலவசமாக மாநில அளவிலான 2 – முழு மாதிரித்தேர்வுகள் (Online&
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி.பி. முத்து, டிக்டாக் மூலம் பிரபலம் ஆனவர். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் புகழ் பெற்றார். இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். திங்கட்கிழமையான இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்று ஆட்சியரிடம் மனு அளிக்க ஜி.பி.முத்து தனது மனைவியுடன் வந்தார். மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஜி.பி.முத்து அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:- “தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் வட்டம்,காலன் […]
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் உலக செவிலியர் தின விழா நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, மருத்துவ துறையில் 25 மற்றும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவை புரிந்த செவிலியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உள்புற நோயாளிகளை உடனிருந்து பராமரித்துக் கொள்ளும் நபர்கள் தங்குவதற்காக ரூ 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தைக் கனிமொழி […]
தென்னிந்திய திருச்சபையின் கீழ் செயல்படும், துாத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகத்தை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி கவனித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி துாத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள டயோசீசன் அலுவலக வளாகத்தில் ஜோதிமணியின் காரை வழிமறித்து மத போதகர்கள் சிலர் தகராறு செய்தனர். பிஷப் செல்லையா காரையும் அவர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், ஜோதிமணியின் உதவியாளர் கருணாகரன் என்பவர் தாக்கப்பட்டார். துாத்துக்குடி ஏ.எஸ்.பி., மதனிடம் அவர் […]
தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் அதிகரித்த எச்சரிக்கை நிலையை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி பல்வேறு விதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் பல அடுக்கு பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் சோதனை, உடமைகள் சோதனை, வாகன சோதனை மற்றும் பிற நாசவேலை தடுப்பு ஒத்திகைகளின் செயல்பாட்டை மாவட்ட போலீஸ் சூப்பிர்நாடு ஆல்பர்ட் ஜான் அவர்கள் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்,அதிகாரிகள் பங்கேற்றனர். அனைத்து […]
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் என்.எல்.சி.யில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் மூலம் தலா 500 வீதம் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த 3-ந்தேதி முதல் யூனிட் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2-வது யூனிட்டும் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் 9.5.2025 மற்றும் 10.5.2025 தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 8.5.2025 மாலை 6 மணி முதல் 11.5.2025 காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா – 2023 சட்டப்பிரிவு 163(1) -ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
கொல்கத்தாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 5ம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்நாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த இயக்குநர் அருந்ததி அரசு என்பவரின் “திரு” என்ற குறும்படம் தமிழ் மொழியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இந்த குறும்படம் திருநங்கையர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், அடுத்த கட்ட நகர்வு குறித்தும் அழுத்தமாக பேசும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட “திரு” என்கிற திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தின் இயக்குநர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் […]
என்எல்சி தமிழ்நாடு பவா் லிமிடெட் நிறுவனம் சாா்பில் தூத்துக்குடியில் செயல்படும் என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில், தலா 500 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அலகுகள் இயங்கி வருகின்றன. இந்த அனல்மின் நிலையத்தில் சுமாா் 1350 க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்கள் தங்களுக்கு நெய்வேலி என்எல்சியில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். மேலும் இது தொடா்பாக […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
