• March 6, 2026
செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவுக்கு கடந்த 1-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டு வந்தது. இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ராஜீவ் காந்தி […]

கோவில்பட்டி

மக்காச்சோளம் மற்றும் நவதானியம் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி தமாகா போராட்டம் 

கோவில்பட்டி கோட்ட தலைமை அஞ்சலகம் முன்பு தமாகா  சார்பில் போராட்டம் நடந்தது.  தமாகா தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார்  மாவட்ட இளைஞரணி தலைவர் கனி, மகளிர் அணி அமுதா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் அய்யாதுரை, விக்னேஷ்ராஜா, மாவட்ட பொருளாளர் செண்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன், தமாகா மாவட்டச் செயலாளர் அழகுசுப்பு, வட்டாரத் தலைவர்கள் பூல்பாண்டியன், முனியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், மணிமாறன், செந்தூர்பாண்டியன் […]

செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி 

கோவில்பட்டி,கோ.வெங்கடசுவாமி கல்லூரியின் இளஞ்செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணி திட்டம் (அணி எண்: 180), உன்னத் அபியான் திட்டம் மற்றும் கோவில்பட்டி அரிமா சங்கம் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தியது. கோவில்பட்டி அரிமா சங்கத்தின் இயக்குநர் செ.கடம்பூர். செ.ராஜீ எம்.எல்.ஏ  தலைமையில் நீதிமன்ற வளாகத்தில், கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளரான  ஜெகநாதன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி தலைமை அஞ்சல் துறை அலுவலகம் மற்றும் மாதாங்கோவில் தெரு வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள […]

கோவில்பட்டி

வணிகப்பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தி அசத்திய கல்லூரி மாணவ, மாணவிகள் 

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் மாணவர்கள் தயார் செய்த பொருட்களின் சந்தைப்படுத்துதல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.  இயற்கை உணவு வகைகள்,கைவினைப் பொருட்கள்,மீன் வளர்ப்பு,ஜூஸ் வகைகள்,உள்ளிட்ட பல்வேறு வணிக பொருட்களை 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாங்களாகவே தயார் செய்து சந்தைப் படுத்தி விற்பனை செய்தனர். கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் வணிகப் பொருட்களை   வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் […]

செய்திகள்

அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம்: எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

சட்டமன்ற தேர்தலுக்கான 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.. அதன் விபரம் வருமாறு; 1. தற்போதைய ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் குடும்ப சுமை பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே மக்களின் சுமையை போக்க அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும். 2. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். 12ம் வகுப்பு வரை படித்து, வேலைக்காக […]

கோவில்பட்டி

ஜி. வி. என். கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 

கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (ஜி. வி. என்.)யில் கல்லூரியில் ‘பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இயற்பியல் துறைத்தலைவரும் மகளிர்க்கழக ஒருங்கிணைப்பாளருமான பெ.சித்ரலேகா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர்  மூ.சுப்புலெட்சுமி  தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாகதூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  க.க.நிவேதிதா, தூத்துகுடி மாவட்ட நிதிக்கல்வி அறிவு வல்லுநர்  சா.ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இருவருக்கும் கல்லூரி முதல்வர்  மூ.சுப்புலெட்சுமி  பொன்னாடை போர்த்தி கௌவரவித்தார்.  சிறப்பு விருந்தினர் தூத்துக்குடி மாவட்ட […]

கோவில்பட்டி

மாரத்தான் போட்டியில் நகராட்சி பள்ளி மாணவிகள் சாதனை 

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் கோவில்பட்டி வட்டார அளவிலான 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவிகளுக்கான  மாரத்தான் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களை பெற்று  சாதனை படைத்தனர்.  7ம் வகுப்பு  மாணவி முனீஸ்வரி முதலிடம்,  8ம் வகுப்பு மாணவி முருகலட்சுமி இரண்டாமிடம்,7ம் வகுப்பு மாணவி ரத்தினப்பிரியா மூன்றாமிடம் பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி (தூத்துக்குடி மாவட்ட  ஆக்கி கழகம் […]

கோவில்பட்டி

திமுக ஸ்டாலின் மகளிர் படை யினர் வாக்கு சேகரிப்பு 

கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக ஸ்டாலின் மகளிர் படை லிங்கம்பட்டி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் வாக்கு சேகரித்தனர். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், வழக்கறிஞர் ராமச்சந்திரன்,மாவட்ட பிரதிநிதி தங்கச்சாமி, கிளைச் செயலாளர் சேவியர் லாரன்ஸ்,கிளை பிரதிநிதி மைக்கேல் சாமிநாதன்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்

கோவில்பட்டி

கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் கருத்தரங்கு 

 கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்வி நிறுவனத்தில் “அறிவால் ஆளுமை கொள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு  நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார்.. லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறை முதுநிலை பேராசிரியர் குமாரமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக துபாய் எம்.என்.சி., ஆலோசகரும், சர்வீஸ் டூ தி சொசைட்டி நிறுவனருமான ரவி சொக்கலிங்கம் கலந்து கொண்டார். அவரை மாணவி திவ்யா நர்த்தினி அறிமுகப்படுத்தினார். துபாய் எம்.என்.சி., ஆலோசகர் ரவி சொக்கலிங்கம் […]

செய்திகள்

வேலூர் கூட்டத்தில் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள்

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிர்வாகிகளின் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.  கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அங்கிருந்தவர்களிடம் முரட்டு ஜல்லிக்கட்டு காளை பற்றி குட்டிக் கதை ஒன்றை கூறிய விஜய், ‘சிறியவன், அனுபவம் இல்லாதவன் என்று எதுவுமே கிடையாது. பிரச்சினையை எப்படி தீர்க்கிறோம் என்பதுதான் முக்கியம்’ என்றார். மேலும், தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று குற்றம்சாட்டிய விஜய், சட்டம்-ஒழுங்கு காணாமல் போய் […]