கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் கலந்துகொண்டு, பேசுகையில் கூறியதாவது:- ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எத்தனை உயரங்களுக்குச் சென்றாலும் சில காயங்களையும் வலிகளையும் மறக்க முடியாது. எனக்கு அனைத்தையும் விட அதிக வலியையும் காயத்தையும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான். நெடுஞ்சாலையில் இருந்து எங்களைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததே போலீஸ்தான். கரூர் சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்தனர்.நமக்கு இத்தனை வலிகளைக் கொடுத்தவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் […]
கரூர் துயரத்தின்போது உதவி செய்தவர்கள் யார், ஓடிப்போனவர்கள் யார்? என்று மக்களுக்கு தெரியும்
தூத்துக்குடியில் இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த ஆட்சியில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்,. எந்த இடத்திற்கு போகக்கூடாதோ அந்த இடத்திற்கே தொடர்ந்து சென்று, அங்கிருக்கக்கூடிய… மக்களுக்கு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்கு சென்று .. அங்கே இருக்கக்கூடிய குழந்தைகளின் மனநிலையை பாதிக்கக்கூடிய அளவிற்கும், அவர்களுக்கு மன உளைச்சலை தரக்கூடிய அளவிற்கும் நடந்து… கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி முதல்-அமைச்சரும் […]
கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு செல்லும் சாலை மிகவும் குறுகலாகவும் ஆங்காங்கே பெரிய பள்ளங்களுடன் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்ற இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சாலையை விரிவாக்கம் செய்து சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையில் பாய் விரித்து படுத்து உறங்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மந்தித்தோப்பு சாலை பால்பண்ணை அருகில் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் […]
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பேச பயந்து நடுங்குவது ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தமிழகத்தின் டெல்டா பகுதி விவசாயிகள் தண்ணீரின்றித் தவித்து வரும் வேளையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டிய முழுப் பொறுப்பும், அதிகாரமும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே (CWMA) உள்ளது. தார்மீகப் பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் CWMA உடனடியாகச் செயல்பட்டு தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும். அண்டை மாநிலமான கர்நாடகாவும் இந்த சட்டப்பூர்வ உத்தரவுகளுக்குக் […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதி பாடப்பிரிவின் வணிகவியல் தொழில்நெறிகணக்கியல் துறை சார்பில் நடத்தப்பட்ட சங்கத் தொடக்க விழா மற்றும் மாணவர்களிடையே தன்னார்வத் தொண்டு என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இக்கல்லூரியின் செயலர் ப.மகேந்திரன், கல்லூரி முதல்வர் அ.பாண்டிராணி மற்றும் இயக்குநர். பா.மகேஷ்குமார் வழிகாட்டுதலின் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக, இந்திய கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் நட்பிற்கான சங்கத்தின் மாநில செயலாளர் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர். கே. தமிழரசன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே […]
கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான பசுமை கழகத்தின் தொடக்க விழா நடைபெற்றது. வணிகவியல் துறை மாணவி பிரபா வரவேத்க்று பேசினார்,. கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார், கல்லூரி முதல்வர் முனைவர் செல்வராஜ் மற்றும் வணிகவியல் துறையின் தலைவர் விஜய கோபாலன் முன்னிலை வகித்தனர். பசுமைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வி கழகத்தின் உறுப்பினர்களை அறிமுகம் செய்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் சிறப்பு விருந்தினர்களாக வன சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி […]
கடந்த ஆண்டு தவெக பிரசாரத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கான ஆணை வழங்க உள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக பிரசாரத்தின்போது இறந்தவர்கள் என்பதால் தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வில்லிசேரி பகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தை மதிமுக பொதுசெயலாளர் வைகோ கொடியசைத்துத் துவக்கி வைத்தார்…. அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது: ஸ்டெர்லைட் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினை, சீமை கருவேல… மரங்கள் அகற்றம் என பல்வேறு பிரச்சினைகளுக்காக 20 ஆண்டு காலமாக போராடி வருகிறேன். முல்லை பெரியாறு அணையை . உடைக்க கேரளா அரசு தீவிரமாக இருந்தபோது, அதை எதிர்த்து நடைபயணம், […]
தூத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி அலகுகள் இயங்கி வருகின்றன. மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சேமிப்புக் கிடங்குகளில் குவித்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில், நிலக்கரி குவியலில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. அப்போது வீசிய பலத்த காற்றின் காரணமாகத் தீ மளமளவெனப் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் […]
தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரியப் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிட வேண்டும் என மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவின்படி தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை பிறப்பித்திருந்தார். மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. பழனியப்பன் சென்னை உயர் […]







