தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே வெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 50). கோவை துடியலூரில் மளிகை கடை நடத்தி வரும் இவர், அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மோசஸ் தனது சொந்த ஊரான வெள்ளாளன்விளையில் உள்ள கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவில் குடும்பத்தினர், உறவினர்களுடன் காரில் புறப்பட்டு வந்தார். அவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் நேற்று காலையில் குற்றாலத்துக்கு சென்று அருவிகளில் குளித்தனர். பின்னர் மாலையில் குற்றாலத்தில் இருந்து நெல்லை, […]
கோவில்பட்டி சேகரம் சிஎஸ்ஐ தூய பவுலின் ஆலய ஆண்கள் ஐக்கிய சங்கம், கடலையூர் சேகரம் சிஎஸ்ஐ தூய பவுலின் ஆலயம், மற்றும் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண்புரை பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமிக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க நிதி உதவியுடன் கடலையூர் டிஎன்டீடிஏ. நடு நடுநிலைப் பள்ளியில் நடந்த இம்முகாமிற்கு கடலையூர் சேகர குரு சிமியோன் பிரபு டேனியல் தலைமை தாங்கினார், சமூக ஆர்வலர்கள் சின்னத்தம்பி, ஜெயராஜ், […]
கோவில்பட்டி புதுக்கிராமத்தில் தவெக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. நகர செயலாளர் கிழக்கு (பொறுப்பு) ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.. கொள்கை பரப்பு நிர்வாகி வீரபாண்டி மகேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைமை நிர்வாகி பாலா என்ற பாலசுப்பிரமணியன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பழங்கள், குளிர்பானங்கள், மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும் புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரியின் குழந்தைகள், பொன்ராஜவேல், சாய்ராகவி ஆகியோருக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,திருநெல்வேலி பொருநை மருத்துவமனை ஆகியவை சார்பில் கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் தாமோதரக்கண்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட தலைமை உதவி ஆளுநர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, பொருறை மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். பள்ளி செயலாளர் சுப்பிரமணியன் மருத்துவ முகாமினை தொடக்கி வைத்தார். […]
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சசி தரூர்( காங்கிரஸ்) ரவி சங்கர் பிரசாத் (பாஜக) , சஞ்சய் குமார் ஜா (ஜேடியு), பைஜயந்த் பாண்டா (பாஜக) , கனிமொழி கருணாநிதி (திமுக) , சுப்ரியா சுலே (என்சிபி), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே […]
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று அதிகாலை நாகர்கோவில் நோக்கி வந்தது. இந்த பஸ்சில் 22 பேர் பயணம் செய்தனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 6 குடும்பத்தினர், கோவில்பட்டியில் இருந்து ஒரு வேனில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றனர்.இந்த வேனை கோவில்பட்டியை சேர்ந்த சசிகுமார் (வயது 52) என்பவர் ஓட்டினார்.. நேற்று அதிகாலை 5 மணியளவில் […]
ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் தனியாக வசித்து வரும் நிலையில் ராமசாமி, மனைவி பாக்கியத்துடன் விலாங்காட்டு வலசு பகுதியில் வசித்து வந்தார். அத்துடன் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்தார். இந்த சூழலில், கடந்த 1ம் தேதி மகன் கவிசங்கர் செல்போன் மூலம் அழைத்தும் தந்தை எடுக்காததால் அருகில் […]
தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வந்தது. அதேநேரம், சில இடங்களில் கோடை மழையும் காணப்பட்டது. பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில், தமிழகத்தில் வெயில் உக்கிரமாக காணப்படும். ஆனால், இந்த ஆண்டோ, அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இனி வரும் நாட்களிலும் தமிழகத்தில் மழை பொழிவுக்கே […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் கோவில்பட்டி நகர அதிமுக வார்டு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமை தாங்கி,ஆலோசனைகளை வழங்கினார். நகரச்செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் செண்பகமூர்த்தி, கவியரசன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி,ஜெ பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன்,ஜெ பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி அம்பிகை பாலன்,முன்னாள் நகர […]
சாகித்ய அகாடமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் 4 வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில்பட்டி எட்டையபுரம் ரோட்டில் உள்ள கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவில்பட்டி கிளை சார்பாக, கிளைச் செயலாளர் சக்தி செல்லப்பா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்