கோவில்பட்டி புறநகர் பகுதிகளான சுபா நகர், கிருஷ்ணா நகர் மற்றும் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதிது புதிதாக நிறைய வீடுகள் கட்டி குடியேறி வருகிறார்கள். இந்த பகுதிகளில் சில மாதங்களாக வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை, , விலை உயர்ந்த பைக்குகள் திருட்டு போன்றவை தொடர்பாக வந்த புகார்களின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அப்பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு துப்பு துலக்கினர். இதில் கேமரா […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாளான இன்று( 26ம் தேதி) காலை 7. மணி அளவில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும், செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதின. இரு அணிகளும் பலம் வாயந்ததாக இருந்ததால் ஆட்டம் மிகவும் கடுமையாக இருந்தது. முதல் கோல் போடுவது யார் என்ற […]
தமிழகத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 6 எம்.பி.க்களின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது., இதன்படி, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 9-ந்தேதி தொடங்கும். வேட்பு மனு பரிசீலனை ஜூன் 10-ந்தேதி நடைபெறும். வேட்பு […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில், இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய மாலை நேர போட்டிகள் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற 10வது லீக் போட்டியில் சென்னை இன்கம் டேக்ஸ் ஹாக்கி அணியும் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதின. இப்போட்டியில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வீரர்கள் 37வது நிமிடத்தில் […]
உக்ரைனுக்கு எதிரான போரில் 3 ஆண்டுகளாக ரஷியா ஈடுபட்டு வருகிறது. போரால் பெண்கள், வீரர்கள் என லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குர்ஸ்க் ஓபிளாஸ்ட் என்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, உக்ரைனின் ஆளில்லா விமானம் ஒன்று புதினின் ஹெலிகாப்டரை […]
கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு தனூஷ்கோடியாபுரம் செல்வ விநாயகர் கோவில் முன்பு முளைப்பாரி எடுத்த பெண்கள் கும்மியடித்து பூஜையில் கலந்து கொண்டனர். பூஜைகளை சுப்பிரமணிய சாமி, முருகன் சாமி செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெங்கடேஷ் செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு கடலில் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் ரசாயனம் இருந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அரபிக்கடலில் நேற்று பலத்த காற்று வீசியது. கொச்சி அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் சென்றபோது திடீரென்று கவிழ்ந்தது. நல்லவேளையாக மூழ்காமல் சாய்ந்த நிலையில் நின்றது. மேலும் சரக்கு கப்பலில் ரசாயனம் இருந்த கன்டெய்னர்கள் கடலுக்குள் விழுந்தன. இந்த கப்பலில் மாலுமிகள் உள்பட […]
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உலக அழகிப் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக கூறி இங்கிலாந்து அழகி மில்லா மேகி போட்டியில் இருந்து விலகி உள்ளார். மே 7 ஆம் தேதி வந்தடைந்த மில்லா, 16 ஆம் தேதியே இங்கிலாந்துக்கு திரும்பிவிட்டார். மில்லாவுக்கு பதிலாக இங்கிலாந்து நாட்டின் இரண்டாவது அழகியான சார்லோட் கிராண்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டி தொடர்பாக அந்நாட்டில் நேர்காணலில் பேசிய மில்லா மேகி கூறியதாவது:- “போட்டியாளர்கள் 24 மணிநேரமும் ஒப்பனையுடனும், […]
கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழகம் சார்பாக கோடைகால இலவச ஆக்கி பயிற்சி முகாம் நடைபெற்றது. கடந்த மே 10ம் தேதி முதல் பயிற்சி முகாம் தொடர்ந்து காலையும் மாலையும் நடைபெற்று இன்று 25-ந் தேதி முடிவடைந்தது. இந்த பயிற்சி முகாமில் 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் பயிற்சி முகாமுக்கு தினமும் ஒரு சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்தனர் […]
கோவில்பட்டியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி;கோவையைச் சேர்ந்தவர் முதலிடம்
போதை பொருள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டி கோவில்பட்டி மாராத்தான் என்ற பெயரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்காக கோவில்பட்டி ஜே சி ஐ விக்டரி கிங்ஸ் மற்றும் பகடா ஸ்போர்ட்ஸ் சார்பில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பகடா ஸ்போர்ட்ஸ் மைதானத்திற்கு முன்பு மாரத்தான் போட்டியை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தொடங்கி வைத்தார் இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா கர்நாடக மாநிலங்களை சேர்ந்தவர்கள் என 500 […]