ஏப்ரல் 1 முதல் வங்கி விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: ஏ.டி.எம் பரிவர்த்தனை கட்டணம் உயர்கிறது
நிதியாண்டு தொடங்கும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஏ.டி.எம் பயன்பாடு தொடர்பான புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. டிஜிட்டல் பணப் பரிமாற்ற பாதுகாப்பு மற்றும் வங்கிச் சேவைகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்-களில் மாதம் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். 5 முறைக்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி (GST) வசூலிக்கப்படும்.

எச்.டி.எப்.சி (HDFC) போன்ற சில வங்கிகள், ஏ.டி.எம் கார்டு இல்லாமல் UPI மூலம் பணம் எடுக்கும் (Cardless Cash) வசதியையும் இந்த 5 முறை இலவச வரம்பிற்குள்ளேயே கொண்டு வந்துள்ளன.
இதனால் அடிக்கடி சிறிய தொகைகளை எடுப்பவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), தனது டெபிட் கார்டுகள் மூலம் ஒரு நாளில் எடுக்கக்கூடிய பண வரம்பை குறைத்துள்ளது.
பிரீமியம் கார்டு: நாள் ஒன்றுக்கு ரூ.1,50,000-லிருந்து ரூ.75,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஏ.டி.எம்-ஐ மிதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரையிலும், அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரையிலும் கூடுதல் செலவு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களில் ஏதேனும் மோசடி நடந்தால், அது குறித்து 3 வேலை நாட்களுக்குள் புகார் அளித்தால் அல்லது வங்கியின் மீது தவறு இருக்கும் பட்சத்தில், இழந்த பணம் முழுமையாகத் திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ளது.
தேவையற்ற கட்டணங்களைத் தவிர்க்க, ஏ.டி.எம் பயன்பாட்டை இலவச வரம்பிற்குள் வைத்துக்கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன. சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் குறித்து உடனடியாக வங்கிக்குத் தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.







