மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் சத்யா விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டி
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக சத்யா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் கோவில்பட்டி அருகே உள்ள கே.துரைசாமிபுரத்தை சேர்ந்தவர்.இவரது தந்தை ராமச்சந்திரன் அதிமுக பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சத்யா கடந்த 2020ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக இருந்தார். ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் பின்னர், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் செப்டம்பர் 2022-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்








