• June 4, 2025

Month: December 2024

கோவில்பட்டி

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

வீரம், பக்தி, ராம சேவை, பேச்சாற்றல், புத்தி கூர்மை ஆகியவற்றிற்கு உதாரணமாக விளங்குபவர் அனுமன். ராம காவியத்தின் ஆணிவேராக விளங்கக் கூடியவர் அனுமன். ராமாயணத்தில், அனுமனின் திறன்களை அழகாக எடுத்துக் கூறும் பகுதிக்கு தான் சுந்தரகாண்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சுந்தரகாண்டத்தை படித்தாலே எப்படிப்பட்ட துன்பங்களும் தீரும். அனுமன் அவதரித்த தினத்தையே அனுமன் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். மார்கழி மாத அமாவாசையில், மூலம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் அனுமன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. 2024ம் ஆண்டின் தொடக்கமான ஜனவரி மாதத்தில் ஏற்கனவே […]

தூத்துக்குடி

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதியம்புத்தூர் வாலிபர் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்துரை அடுத்த  மேலமடத்தைச் சேர்ந்த ஆத்திமுத்து என்பவரது மகன் தனசிங் (வயது  21). இவர் விபத்தில் சிக்கி . தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இருந்த நிலையில் மூளைச் சாவு அடைந்தார் இதை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் மற்றவர்கள் உயிர் வாழ பயனளிக்கட்டும் என்ற உயரிய நோக்கத்தில் தன்சிங்கின்  பெற்றோர் மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர்.   இதனையடுத்து, தனசிங்கின் உடல் உறுப்புக்களான கல்லீரல், 2 சிறுநீரகங்கள், […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் த.வெ.க. உறுப்பினர்கள் சேர்ப்பு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக “தளபதியின் தங்கைகள் தாய்மார்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா” கோவில்பட்டி காமராஜர் அரங்கில் நடைபெற்றது. சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சுரேஷ் சத்யா  தலைமை தாங்கினார், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத் தலைவர் சஜி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். 500-க்கும் மேற்பட்டோர் த.வெ.க.வில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அவர்களை வரவேற்று சால்வை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் செந்தில் குமார், வினோத்கண்ணன், ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர். முனைவர் சம்பத்குமார் எழுச்சியுரை ஆற்றினார், […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.32½ கோடி செலவில் மினி டைடல் பூங்கா; மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் இன்று  (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி வந்தார். சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு வாகைகுளம் விமான நிலையத்துக்கு மதியம் வந்தார், விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், சபாநாயகர் அப்பாவு, ஆட்சியர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் மற்றும் கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சத்யாநகர் […]

கோவில்பட்டி

பெண்கள் கபடி போட்டியில் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு முதல் பரிசு

தூத்துக்குடி மாவட்ட பள்ளி அளவிலான பெண்கள் கபடி போட்டி, கோவில்பட்டி முத்துநகரில் நடைபெற்றது, இப்போட்டியில் 18 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியை அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும்  நகர்மன்ற உறுப்பினருமான கவியரசன் தொடங்கி வைத்து, இறுதியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கினார். போட்ட்டியில் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் முதல் பரிசு பெற்றது, , 2ம் இடம் தூத்துக்குடி தஸ்நேவிஸ் அணிக்கு கிடைத்தது., 3ம் இடம் ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி , […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் போதை பொருள் ஒழிப்பு  விழிப்புணர்வு கருத்தரங்கம் 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட மன நல திட்டத்தின்படி கோவில்பட்டி துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை கல்லூரியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது, ,கல்லூரி செயலர் கண்ணன் தலைமை தாங்கினார் .கல்லூரி முதல்வர் செல்வராஜ், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன்ராஜா, பேராசிரியர் விஜயகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட மன நல திட்ட மருத்துவர் ஜோனா, போதை பொருள் விழிப்புணர்வு, பின்விளைவுகள்,மனம் திட்டம்,பற்றி மாணவர்களிடம் […]

சினிமா

மலையாள சினிமா துறைக்கு இந்த ஆண்டு ரூ.700 கோடி இழப்பு

கேரள சினிமாத்துறை 2024-ம் ஆண்டில் மட்டும் ரூ.650 முதல் ரூ.700 கோடி வரை இழப்பைச் சந்தித்துள்ளதாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,  கூறி இருப்பதாவது:-  ‘இந்த ஆண்டு மலையாள சினிமாவில் ஐந்து ரீ-ரிலீஸ் உட்பட 204 படங்கள் வெளியாகின. இதற்கு சுமார் ரூ.1,000 கோடி செலவிட்டது. இதில் 26 திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று எங்களுக்கு ரூ.350 கோடி மட்டுமே லாபம் கிடைத்தது, அதே […]

செய்திகள்

முதலாம் ஆண்டு நினைவு நாள் :விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா அஞ்சலி

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறைந்த விஜயகாந்த் உடலுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்திற்கு தினந்தோறும் ஏராளமான […]