• June 6, 2025

கோவில்பட்டியில் போதை பொருள் ஒழிப்பு  விழிப்புணர்வு கருத்தரங்கம் 

 கோவில்பட்டியில் போதை பொருள் ஒழிப்பு  விழிப்புணர்வு கருத்தரங்கம் 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட மன நல திட்டத்தின்படி கோவில்பட்டி துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை கல்லூரியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது,

,கல்லூரி செயலர் கண்ணன் தலைமை தாங்கினார் .கல்லூரி முதல்வர் செல்வராஜ், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன்ராஜா, பேராசிரியர் விஜயகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

மாவட்ட மன நல திட்ட மருத்துவர் ஜோனா, போதை பொருள் விழிப்புணர்வு, பின்விளைவுகள்,மனம் திட்டம்,பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு மன நல சேவை எண் 14416, தூத்துக்குடி மாவட்ட மன நல சேவை உதவி எண் 9488044723 மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது,

போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர், காணொளி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது,மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது, நிறைவாக. தொடக்கத்தில் மாணவி திவ்ய ஜோதி அனைவரையும் வரவேற்றார் மாணவி ரீத்திகா பாரதி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  குடி மக்கள் நுகர்வோர் மன்ற தலைவர் ரமேஷ் மற்றும் செல்வி,ஶ்ரீராமஜெயா ஆகியோர் செய்திருந்தனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *