கோவில்பட்டி, குன்னம் தொகுதிகளில் தமிழ்ப் பேரரசு கட்சி போட்டி
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி மற்றும் குன்னம் ஆகிய 2 தொகுதிகளில் தமிழ்ப் பேரரசு கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் வ.கவுதமன் அறிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் தலைமையிலான தமிழ்ப் பேரரசு கட்சி, வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. \

இதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் வழக்கறிஞர் செ. சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குன்னம் (பெரம்பலூர்) தொகுதியில் வழக்கறிஞர் த. அன்புத்தமிழன் போட்டியிடுகிறார்.
மொழி, நிலம் மற்றும் தமிழர் அதிகாரம் ஆகியவற்றை மீட்டெடுக்கச் சமரசமின்றிப் போராடப் போவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. தற்போதைய திரையிசை மயக்கம் மற்றும் இலவச அரசியலைத் துறந்து, மக்கள் நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனப் பொதுச்செயலாளர் வ.கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு உரிமை மற்றும் நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் முன்னின்ற தங்களது குரல், இனி சட்டமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.








