மழையில் வீடு இடிந்ததால் பெண்ணுக்கு அரசு வழங்கிய புதிய வீடு
கோவில்பட்டி இனாம்மணியாச்சியைச் சேர்ந்த பி.சுப்புலெட்சுமி மற்றும் அவரது குடும்பம் வசித்து வந்த வீடு மழையினால் பாதிக்கப்பட்டு வசிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், புது வீடு கட்டுவதற்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

அக்கோரிக்கையை ஏற்று, சுப்புலெட்சுமி குடும்பத்திற்கு அரசு புதிதாகக் கட்டிக்கொடுத்திருக்கும் கலைஞர் இல்லத்தை கனிமொழி எம். பி.திறந்து வைத்தார்.

அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர்.







