• March 12, 2026

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

 பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

Oplus_16908288

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்  உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி புதன்கிழமையான நேற்று (11.3.2026) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த 54 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *