தென் மாவட்ட அளவிலான அழகு கலை, ஆரிஒர்க் போட்டிகள்

தென் மாவட்ட அளவிலான அழகு கலை, தையல், ஆரிஒர்க் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் கோவில்பட்டியில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டி ராஜ் மஹாலில் அழகு கலை, தையல், ஆரிஒர்க் , மெஹந்தி உள்ளிட்ட போட்டிகளும் பள்ளி மாணவர் மாணவிகளுக்கான யோகா, பரதம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு வழங்கி பாராட்டி பேசினார்.
இந்திய ஆரி தொழிலாளர்கள் கூட்டமைப்பு தேசிய தலைவர் அரவிந்த் லட்சுமி நாராயணன்,தமிழ்நாடு ஆரி தொழிலாளர்கள் சங்க தலைவர் ராஜராஜேஸ்வரி, பொதுச்செயலர் பரமேஸ்வரி, பொருளாளர் ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட செயலர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.







