• June 7, 2025

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி மாற்றம்; புதிய ஆட்சியராக கே. இளம்பகவத்  நியமனம்  

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  மாற்றம்; புதிய ஆட்சியராக கே. இளம்பகவத்  நியமனம்  

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக 3 ஆண்டுகள் பதவி வகித்த செந்தில்ராஜ் மாற்றத்தை  தொடர்ந்து கடந்த 19.10. 2023 அன்று புதிய ஆட்சியராக  கோ.லட்சுமிபதி நியமிக்கப்பட்டார்.

கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாற்றம் செய்யப்பட்டு புதிய கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார்,

இந்த நிலையில் ஆட்சியர் லட்சுமிபதி திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலினின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்கிறார்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக பொது நூலக இயக்குனராக இருக்கும் கே.இளம்பகவத்  நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தின் 28-வது ஆட்சியர் ஆவார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *