• June 8, 2025

மா மதுரை விழா; காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 மா மதுரை விழா; காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று  முதல் 4 நாட்கள் நடைபெறும் மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் “மா மதுரை” விழாவை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.  அவர் பேசுகையில்  கூறியதாவது:-

மதுரையின் பண்பாட்டைக் கொண்டாடும் இந்த நிகழ்வை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல, எல்லோரும் போற்றலாம்.

இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. 2000 ஆண்டு வரலாறு கொண்டது. 1866 ஆம் ஆண்டே நகராட்சியான ஊர் மதுரை, சென்னைக்கு அடுத்தபடியாக மாநகராட்சி ஆன ஊர் மதுரை. சென்னைக்கு அடுத்த 2-வது மாநகராட்சியாக 1971-ல் மதுரையை மாற்றினார் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.

திராவிட மாடல் ஆட்சி மதுரைக்கு 2 அமைச்சர்களை கொடுத்துள்ளது. திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட இடமும் மதுரை தான். அனைவருக்கும் அவரவர் ஊர் போற்றுதலுக்குரியது. தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட கண்ணகியின் மண் இது. நீதியைக் காக்க தன் உயிரைத் தந்த மன்னர் ஆட்சி செய்த மண் இது. பல்வேறு வரலாறு கொண்ட மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல, எல்லோரும் போற்றலாம்

ராவி மாடல் ஆட்சி மதுரைக்கு 2 அமைச்சர்களை கொடுத்துள்ளது. திமுக இளைஞரணி துங்கப்பட்ட இடமும் மதுரை தான். அனைவருக்கும் அவரவர் ஊர் போற்றுதலுக்குரியது. தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட கண்ணகியின் மண் இது. நீதியைக் காக்க தன் உயிரைத் தந்த மன்னர் ஆட்சி செய்த மண் இது. பல்வேறு வரலாறு கொண்ட மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல, எல்லோரும் போற்றலாம்

இவ்வாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

.


இந்நிகழ்ச்சியில், மதுரையிலிருந்து  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர். பி. மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள். கோ. தளபதி. பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். சங்கீதா,  மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன்,  மாநகராட்சி ஆணையர்  சி. தினேஷ்குமார், மதுரை யங் இந்தியன்ஸ் தலைவர் த பைசல் அகமது, மா மதுரை விழா தலைவர் விக்ராந்த் கார்மேகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *