தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 53). இவர் நெல்லை அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 25-ந் தேதி பணியில் இருந்த அவரை அலுவலகத்தில் புகுந்து கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம நிர்வாக […]
கோவில்பட்டியில் கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக இன்று உலகத் தொழிலாளர் தினம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்ளின் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சியின் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிச்செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் வரவேற்புரையாற்றினார், கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன், ] இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் முனைவர். ஆ.சம்பத்குமார் ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
மதிமுகவை திமுகவோடு இணைத்துவிடலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில் மதிமுகவை அதன் தாய் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னிச்சையாக எடுத்த நடவடிக்கைகளால் கட்சி பாதிக்கப்படுவது குறித்து தான் கடிதம் எழுதியதாகவும் , அந்த கடிதங்களுக்கு பதில் வரவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த கடிதம் ம.தி.மு.க.வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுகவுடன் கட்சியை இணைக்கும் நோக்கம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் ,திருக்கோவில் தர்மகர்த்தா எஸ்.எம்.மாரியப்பன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், மண்டபடியாளர்கள் பொதுமக்கள், மஞ்சள்நீராட்டு இளைஞர்கள் [புடைசூழ மங்கள பொருட்களுடன் திருக்கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அதை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. கொடிக்கம்பத்துக்கு நடந்த பல்வேறு பூஜைகளுக்கு பிறகு கொடிமரம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து […]
மே தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் மின் அமைப்பாளர்கள், மின் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள். கோவில்பட்டி மின்சார வாரியம் அலுவலகம் முன்பிருந்து விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர் ஊர்வலத்திற்கு முன்பு சிலம்பாட்ட மாணவ மாணவிகள் பல சாகசங்களை நிகழ்த்திக் காண்பித்தனர் பேரணியில் சென்றவர்கள் மின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்தபடி சென்றனர், விழிப்புணர்வு நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்த விழிப்புணர்வு வாசகங்கள் வருமாறு:- *சுவரில் பதிக்கப்படும் வயரிங் வேலைகளுக்கு வரைபடம் அல்லது மின்சாரம் என்று அம்புக்குறி ஸ்டிக்கர் […]
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முறம்பன் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடம் .ஒட்டநத்தம் கிராமத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் போன்ற கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், ,,மாவட்ட ஊராட்சித் தலைவர்.பிரம்மசக்தி, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ், கூடுதல் ஆட்சியர் ஞானதேவ […]