• June 6, 2025

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம் ; 11 நாள் நிகழ்ச்சிகள் முழு விவரம்

 கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம் ; 11 நாள் நிகழ்ச்சிகள் முழு விவரம்

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் ,திருக்கோவில் தர்மகர்த்தா எஸ்.எம்.மாரியப்பன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், மண்டபடியாளர்கள்  பொதுமக்கள், மஞ்சள்நீராட்டு இளைஞர்கள் [புடைசூழ மங்கள பொருட்களுடன் திருக்கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

அதை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. கொடிக்கம்பத்துக்கு நடந்த பல்வேறு பூஜைகளுக்கு பிறகு கொடிமரம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. அப்போது கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினார்கள். சிறிது நேரம் கழித்து பக்தர்கள் கொடிக்கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி சாமி கும்பிட்டனர்.

திருவிழா 11-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 9 மணிக்கு காலை பூஜை, நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை,நடைபெற்று 12.05 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 3 ,மணிக்கு நடை திறக்கப்பட்டு 4 மணிக்கு மாலை  பூஜை நடக்கிறது.

மாலை 6 மணிக்கு திருக்கோவில் எஸ்/.எஸ்.பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் நிகழச்சி ஆரம்பாமாகும். இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலா எழுந்தருளல், 7.25 மணிக்கு கலையரங்க சிறப்பு நிகழ்ச்சி நடக்கும். இரவு 8 மணிக்கு மண்டகபடிதாரர் நிகழ்ச்சிகள் அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் நடைபெறும். இரவு 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா முடிந்து வருதல், பைரவர் பூஜை நடைபெறும்.

சித்திரை திருவிழா நிகழச்சிகள் 11-ந்தேதி வரை நடக்கிறது. 12-ந்தேதி மாலை 6 மங்கு கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும்.

திருக்கோவில் எஸ்.எஸ்.பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் தினமும் நடக்கும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சிகள் அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் நடைபெறும். இன்று முதல் 11-ந்தேதி வரை நடக்கும் நிகழ்ச்சிகள் முழு விவரம் வருமாறு:-

10-ம் நாள் பொங்கலிடுதல் அன்று காளியம்மன் கோவிலில் வழக்கமாக நடைபெறும் இரண்டு கால பூஜைகள், மண்டகப்படிதாரர்களின் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடிபரும். அதிகாலையில் பொங்கலிடுதல், அம்மனுக்கு படைத்தல் சிறப்பு தீப ஆராதனை நடக்கும்.

11-ந்தேதி இரவு 9மணிக்கு கோவில் கலையரங்கத்தில் மேலகரந்தை சந்தனசெல்வி-நாகலட்சுமி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறும். 12-ந் தேதி மாலை 6 மணிக்கு கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும்.

திருவிழா ஏற்பாடுகளை கோவில்பட்டி நாடார் உறவின்முறை தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், துணை தலைவர் எம்.செல்வராஜ், செயலாளர் எஸ்,ஆர்.ஜெயபாலன், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ்குமார், உறுப்பினர்கள் எஸ்.ஆர்,எம்.கே.ராஜேந்திர பிரசாத், ஆர்.ஜி.என்.மாடசாமி, கே.மகேந்திரன், பத்திரகாளியம்மன் திருக்கோவில் தர்மகர்த்தா எஸ்.எம்.மாரியப்பன், செயலாளர் செ.,மாணிக்கம், உறுப்பினர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன்,எஸ்.பாலமுருகன் உள்ளிட்ட குழவினர் செய்து வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *