• June 6, 2025

கோவில்பட்டியில் மின் அமைப்பாளர்கள், மே தின பேரணி

 கோவில்பட்டியில் மின் அமைப்பாளர்கள், மே தின பேரணி

மே தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் மின் அமைப்பாளர்கள், மின் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள். கோவில்பட்டி மின்சார வாரியம் அலுவலகம் முன்பிருந்து  விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர்

ஊர்வலத்திற்கு முன்பு சிலம்பாட்ட மாணவ மாணவிகள் பல சாகசங்களை நிகழ்த்திக் காண்பித்தனர் பேரணியில் சென்றவர்கள் மின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்தபடி சென்றனர்,

விழிப்புணர்வு நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்த விழிப்புணர்வு வாசகங்கள் வருமாறு:-

*சுவரில் பதிக்கப்படும் வயரிங் வேலைகளுக்கு வரைபடம் அல்லது மின்சாரம் என்று அம்புக்குறி ஸ்டிக்கர் சுவற்றில் மீது ஒட்டி வைக்க வேண்டும் அது சுவற்றில் ஆணி அடிப்பதால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும்.

*வீட்டினில் இருக்கும் போது ஈரமற்ற தனி ரப்பர் செருப்பு பயன்படுத்தி சுவிட்சை போடுவது நலம்.

*மாவு அரைக்கும் இயந்திரம் மிக்ஸி மற்றும் அயன் பாக்ஸ் பயன்படுத்தும் போது குழந்தைகள் கைக்கு எட்டாமல் அமைப்பது நலம்.

*குழந்தைகள் உள்ள இடத்தில் டேபிள் பேன் மற்றும் பெடஸ்டல் பேன் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது ஏனென்றால் குழந்தைகள் கைகளை உள்ளே விழுவதால் விரல்கள் துண்டிக்க நேரிடும்.

விழிப்புணர்வு பேரணி, இளையரசனந்தல் ரோடு. மெயின் ரோடு .புது ரோடு. எட்டையாபுரம் ரோடு. மாதாங்கோவில் ரோடு .வழியாக பழைய பஸ் நிலையம் அருகே சென்று முடிவடைந்தது.


பேரணியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மின் அமைப்பாளர்கள் சங்க  தலைவர் செல்வம்,. செயலாளர் முருகராஜ்.,பொருளாளர் சுந்தர்ராஜன் மற்றும் துணைத் தலைவர்கள். கருத்தபாண்டி., பாலசுப்பிரமணியம், ஆரோக்கியசாமி, சுடலை, ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்,

[

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *