• May 20, 2024

ஓட்டப்பிடாரம் அருகே  சமுதாயக்கூடம் திறப்பு

 ஓட்டப்பிடாரம் அருகே  சமுதாயக்கூடம் திறப்பு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முறம்பன் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடம் .ஒட்டநத்தம்  கிராமத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் போன்ற கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

 ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், ,,மாவட்ட ஊராட்சித் தலைவர்.பிரம்மசக்தி,  ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ், கூடுதல் ஆட்சியர் ஞானதேவ சுபம் தாக்கரே, வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி,. வட்டாட்சியர்கள் நிஷாந்தினி, செல்வகுமார், .யூனியன் ஆணையாளர் த.சிவபாலன்,, வட்டார வளர்ச்சி அலுவலர் .ராமராஜ், வேளாண்மைதுறை இணை இயக்குனர் .பழனி வேலாயுதம், ஒட்டநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் .சரிதா, முறம்பன் ஊராட்சி மன்ற தலைவர் .தேன்மொழி சுடலைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை.கனிமொழி எம்.பி, ஆய்வு செய்தார். அவருடன் .ஆட்சியர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் சென்று இருந்தனர்,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *