தொழிலாளர் தின உறுதிமொழி ஏற்பு

கோவில்பட்டியில் கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக இன்று உலகத் தொழிலாளர் தினம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்ளின் தலைமை தாங்கினார்.
நாம் தமிழர் கட்சியின் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிச்செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் வரவேற்புரையாற்றினார், கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன், ] இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் முனைவர். ஆ.சம்பத்குமார் ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
