புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு. வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம், சிவந்தவை ரஜசம், கருநிற புஷ்பங்கள் தாமசம், மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம். மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான். வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும், சிவனுக்கு அர்ச்சிப் பதால், சகல பாவங்களும் விலகும். வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்தபின், […]
கேள்வி: முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டு வாசலில் வைப்பதன் நோக்கம் என்ன? பதில்:-மங்கல பொருட்களில் கண்ணாடியும் ஒன்று. அதனால், மங்களகரமாக கண்ணாடியை வைப்பர். சிலர் கண்ணாடியை திருஷ்டிதோஷம் நீங்கவும் வாசலில் வைக்கிறார்கள். கேள்வி: வாசலில் சிலர் கடவுளின் உருவத்தையே கோலமாக இட்டு வருகின்றனர். இது சரியான முறையா? பதில்:கோலம் என்றால் “அழகு’. இதனை வடமொழியில் “ரங்கவல்லி’ என்பர். ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்று வைத்துக் கொள்ளலாம். இதன் தரைப்பகுதியில் அழகுக்காக கொடிகள் போன்று […]
சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். மனபிரச்னையால் பிரிந்த கணவன் மனைவி, உற்றார் உறவினர் ஒன்று சேர்ந்து வாழ சிவனுக்கு சோம வாரப் பூஜை செய்துவந்தால் விரைவில் ஒன்று சேர்வர். சோமனான சந்திர பகவான் இவ்விரத்தை பின்பற்றி நற்கதி […]
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பரணி நட்சத்திரம் சிறப்புக்குரியது என்றாலும், கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உள்ளது. கார்த்திகை மாதம் முழுவதுமே இறை வழிபாட்டிற்கான விசேஷமான மாதம் தான். ஆனால் இந்த வருட பரணி தீபம், கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை சிவபெருமானின் விசேஷச நாளான பிரதோஷத்துடன் சேர்ந்து வருவது இன்னும் சிறப்பினை தருகிறது. இப்படியான இந்த மாதத்தில் கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் ஏற்றப்படும் தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும்?, ஏற்றும்போது நாம் […]
பசுவின் உடலில் லட்சுமிதேவி குடியிருக்கிறாள் என்பது மட்டுமே நமக்குத் தெரியும்.ஆனால் அது எப்படி உலகிற்குத் தெரிய வந்தது என்பதற்கு ஒரு புராணக் கதை உண்டு. முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் தான் குபேரனுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக குபேரரைப் போலவே பல வருடங்கள் தண்ணீரில் முழுகி இருந்து தவம் செய்தார். அவர் தண்ணீரில் இருந்தது எவருக்கும் தெரியாது. ஒரு நாள் மீன் பிடிப்பவர்கள் தம் வலையை அந்த ஏரியில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது […]
கேள்வி:- கோலில் சிலர் பரிகாரம் என்ற பெயரில் சுண்டல், வாழைப்பழம் போன்றவைகளைத் தருகிறார்கள். அவற்றை பிரசாதமாக வாங்குவதா அல்லது தோஷம் என மறுப்பதா? கூறுங்கள். பதில்:- கோவிலில் கொடுக்கும் பொருள் எதுவானாலும், கடவுளின் அருட்பிரசாதமே. தயக்கமில்லாமல் வாங்கி, பக்தியுணர்வுடன் சாப்பிடுங்கள். நவக்கிரகத்தை பரிகாரமாக வழிபட்டு சுண்டல், பழம் கொடுத்தாலும் அதுவும் பிரசாதம் தான். கேள்வி:-வீட்டில் சுவாமிக்கு சாத்திய பூமாலைகளை எங்கு சேர்ப்பது ? பதில்:-சுவாமிக்கு சாத்திய மாலைக்கு “நிர்மால்யம்’ என்று பெயர். ஆறு,குளம், போன்ற நீர்நிலைகளில் சேர்க்கவேண்டும். […]
நவகிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், பீடை நீங்கும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் வலுவாக இருந்தால் சிறந்த அறிவாளியாகவும், நல்ல படிப்பறிவுள்ளவராகவும், இறைவனிடத்தில் சிந்தனையுள்ளவராகவும் இருப்பார்கள். புதன் காயத்ரி மந்திரம் : ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக அஸ்தாய தீமஹி தன்னோ புத பிரசோதயாத் கல்வி தரும் புதன் பகவான் : புதன் பகவானுக்கு சவும்யன் என்ற பெயர் உண்டு. புதனை […]
மலர்கள் பல வகையாக உள்ளன. அவற்றின் தோற்றம் மற்றும் அதன் மணம் நமக்கு மிகவும் காணதக்கதாக அமைகிறது. நாம் கோவிலுக்கு மலர்களை எடுத்து செல்வது மற்றுமன்றி நாம் கடவுளிடம் வைத்து வணங்குவது மிகவும் நல்லது. ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரசாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது. பின்பு பெண்கள் கோவிலில் கொடுக்கும் […]
தேவர்கள், வானவர்கள், முனிவர்கள் அனைவரும் சிவபெருமானின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கைலாச மலையில் கூடினர். பெருங்கூட்டம் அங்கு கூடியதால் வடக்கு பகுதி தாழ்ந்து தெற்கு பகுதி உயர்ந்து நின்றது. இதனால் சிவபெருமான் அகஸ்தியரை நோக்கி தெற்கு நோக்கி பயணம் செல்லுமாறு கூறினார். அகஸ்திய முனிவரும் தெற்கு நோக்கிப் பயணித்தார். சிவபெருமான் அகஸ்திய முனிவருக்கு தெய்வீக திருமணத்தின் தரிசனத்தை அவர் விரும்பும் போது எல்லாம் பெறலாம் என்று கூறி சில கோவில்களில் தரிசனம் அளித்தார். அந்த கோவில்களில் ரிஷிவந்தியம் […]
சென்னை நகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் பொன்னேரிக்கு செல்லும் வழியில் ஆண்டார்குப்பம் பகுதியில் பழமையும், மகிமையும் வாய்ந்த பாலசுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள முருகன் குழந்தையாகவும், இளைஞராகவும், முதியவராகவும் மூன்று விதமான வடிவங்களில் அதிகார தோரணை கொண்ட வடிவத்தில் நமக்குக் காட்சி தருகிறார். அருணகிரிநாதர் தவிர பாம்பன் ஸ்வாமிகள், கிருபானந்த வாரியார் ஆகியோரும் இந்தத் தலத்து முருகனைப் போற்றி வழிபட்டுள்ளார்கள். ஆண்டிக்கோல சிறுவனாக வந்து முருகன் அருள்புரிந்த தலமென்பதால் ஊர், ‘ஆண்டியர்குப்பம்’ என்றழைக்கப்பட்டு, ‘ஆண்டார்குப்பம்’ […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020