• June 6, 2025

இந்தியாவில் புகழ்பெற்ற சனி பகவான் கோவில்கள்

 இந்தியாவில் புகழ்பெற்ற சனி பகவான் கோவில்கள்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர்

சனி பகவான், கஷ்டங்களை தரக் கூடியவர் என்பதால் அவரை கண்டாலே அனைவரும் பயப்படுவார்கள். இதனால் சனியின் அருட் பார்வையை, கருணையை பெற வேண்டும் என அனைவரும் நினைப்பது உண்டு.

அப்படி சனியின் அருளை பெறுவதற்கு ஏற்ற சனி பகவான் கோவில்கள் இந்தியாவில் எங்கெல்லாம் உள்ளது என்பதை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்களில் முக்கியமானவர் சனீஸ்வர பகவான். நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற கிரகம் இவர் ஒருவர் மட்டுமே. சனி பகவானை, கர்மகாரகன் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அதாவது ஒருவர் செய்யும் நன்மை, தீமைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கக் கூடியவர்.

கர்மாக்களான பாவங்களை போக்க நமக்கு அருளக் கூடியவர் என்று அர்த்தம். இவருக்கு உரிய உலோகம் – இரும்பு, அதி தேவதை – எமன், நவரத்தினம் – நீலம், தானியம் – எள், வாகனம் – காகம், மலர் – கரும்பு வளை, சனீஸ்வரர் நிறம் – கருப்பு.

இந்தியாவின் புகழ்பெற்ற சனி பகவான் கோவில்கள் :

* தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரர் சுயம்புவாக தோன்றியவர். லிங்க வடிவில், பெரிய உருவில் தனித்து காட்சி தருகிறார்.

* திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இக்கோவில் நள தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரரை வழிபட்டால் நம்முடைய துன்பங்கள் யாவும் நீங்கும். நள மகாராஜன் இங்குள்ள சனீஸ்வரரை வழிபட்டுதான் சனி தோஷம் நீங்க பெற்றான்.

* மகாராஷ்டிரா மாநிலம் சனி சிங்கனாபூர் எனும் ஊரில் சனீஸ்வரர் சுயம்புவாக, ஐந்தே முக்கால் அடி உயரத்தில், கருப்பு நிறத்தில் காட்சி தருகிறார்.

* வாலாஜா அருகில் உள்ள வன்னிவேடு எனும் ஊரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் ஒற்றைக் காலில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

* தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வரர் கோவில் பிரகாரத்தில் சூரியனும், சனீஸ்வரரும் வழக்கத்திற்கு மாறாக, நேருக்கு நேர் பார்த்தவாறு காணப்படுகிறார்கள்.

* ஜெய்ப்பூர் செல்லும் வழியில் வேன்வீட்டா எனும் ஊரில் சனி பகவான் கோவில் உள்ளது. 8 கிரகங்கள் வரிசையாக இரண்டு பாகங்களாக காணப்படுகின்றன‌. சனீஸ்வரர் மிகப்பெரிய உருவில் எருமை வாகனத்தில், கிரகங்களுக்கு முன்னால் அமர்ந்து உள்ள கோலத்தில் காட்சி தருகிறார்.

* விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் 17 கி மீ தூரத்தில் உள்ள கல்பட்டு எனும் ஊரில் உள்ள சனி பகவான் கோவிலில் இடது காலை பீடத்தின் மீதும், வலது காலை வாகனத்தின் மீதும் வைத்தவாறு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

* சென்னை ஆதம்பாக்கம் விஸ்வரூப ஸ்ரீ சர்வ மங்கள சனீஸ்வர பகவான் கோவிலில் சனீஸ்வரர் 6 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தருகிறார். இது வட திருநள்ளாறு என்று போற்றப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *