தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 3.06 கோடி ஆண்களும், 3.17 கோடி பெண்களும், 8,465 பேர் மூன்றாம் பாலினத்தவரும் […]
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையை சீமான் இன்று சென்னையில் வெளியிட்டார். அதில் பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன,]தொடர்ந்து சீமான் கூறியதாவது:- மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது. விவசாயி சின்னத்திற்காக கடைசி வரை போராடினோம், ஆனால் கிடைக்கவில்லை சின்னத்தை இழந்தாலும், நம் எண்ணத்தை இழந்து விடக்கூடாது 40 […]
அ.தி.மு.க. கொடி, சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நீண்ட நாட்களாக வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், அ.தி.மு.க.வின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த 18-ந்தேதி தீர்ப்பளித்ததுஇதனை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்தல் பிரச்சாரம் தொடங்கினார். எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஒன்றியம் பெரிய சோரகையில் உள்ள ஸ்ரீ சென்ராய பெருமாள் கோவிலில் எடப்பாடி கே.பழனிசாமி சுவாமி தரிசனம் செய்த பின்னர் அப்பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சேலம் தொகுதி வேட்பாளர் விக்னேஷ் க்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று மாலை திருச்சியில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி […]
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்; டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். . சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் மற்றும் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:- […]
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தார் சீமான். அதன் விவரம் வருமாறு:- 1) திருவள்ளூர் – மு.ஜெகதீஷ் சந்தர் 2) வடசென்னை – DR அமுதினி 3) தென் சென்னை – முனைவர் சு.தமிழ்ச்செல்வி 4) மத்திய சென்னை – முனைவர் இரா.கார்த்திகேயன் 5) திருப்பெரும்புதூர் […]
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் வைத்து கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தலைமைக் கழக நிர்வாகிகள் ஆசி பெற்றனர். பின்னர் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான டி ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது :- மத்திய அரசுடன் உத்தரவு போடும் இடத்தில் 17 ஆண்டுகளாக பலமிக்க கட்சியாக திமுக ஆட்சியில் இருந்தும், தமிழக உரிமைகள் எதையும் பெற்றுத்தர திமுகவினர் முயற்சிக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக […]
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வுக்கு 5 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதா இன்று வெளியிட்டார். விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த்-பிரேமலதா தம்பதியரின் மகனான விஜய பிரபாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். பி.டெக் பட்டதாரியான இவர் அரசியலில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார். மத்திய சென்னை தொகுதி வேட்பாளராக கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) வேட்பாளராக இளைஞர் அணி செயலாளர் கு.நல்லதம்பி, கடலூர் தொகுதி வேட்பாளராக […]
நாடாளுமன்ற மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் 20 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிடுகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 4 பேர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். நேற்று வியாழக்கிழமை .9 பாஜக வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது. இன்று 15 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. அதன் விவரம் வருமாறு:- விருதுநகர்- நடிகை ராதிகா சரத்குமார் சிதம்பரம் (தனி)- கார்த்தியாயினி திருவள்ளூர் (தனி)- பொன். வி. பாலகணபதி வட சென்னை- பால் கனகராஜ், திருவண்ணாமலை- அஸ்வதாமன் நாமக்கல்- கே.பி. […]
: மகளிருக்கு ரூ.3,000 உதவித்தொகை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை, சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட 133 தேர்தல் வாக்குறுதியை அ.தி.மு.க., அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ,தலைமைக்கழக நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் 133 வாக்குறுதிகள் இடம் பெற்று உள்ளன. அவற்றில் முக்கிய வாக்குறுதிகள் விவரம் வருமாறு:- *சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை […]