• March 6, 2026
கோவில்பட்டி

நல்லகண்ணு மறைவு: கோவில்பட்டியில் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான  நல்லகண்ணு  சென்னையில் நேற்று காலமானார்.இன்று அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மாணவர்கள் ஆய்வுக்காக தானமாக வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலை கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நல்லகண்ணுவின் திருஉருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பயணியர் விடுதி முன்பிருந்து அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடந்தது.  ஊர்வலத்திற்கு […]

செய்திகள்

‘தி கேரளா ஸ்டோரி 2’ வெளியிட கேரளா ஐகோர்ட்டு இடைக்கால தடை

மத தீவிரமயமாக்கலை சித்தரிப்பது போன்று வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக ‘தி கேரளா ஸ்டோரி 2’ தயாரிக்கப்பட்டு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை தடை செய்யகோரி கேரள ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த படத்தில் கேரளாவை வகுப்பு வாத கண்ணோட்டத்தில் காட்டுவதாகவும், இது சட்டம், ஒழுங்கை […]

செய்திகள்

ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை அவரிடம்  ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.  இந்த நிலையில் தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ‘பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் ஐகோர்ட்டை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும்’ என்று ராஜேந்திர பாலாஜி கோரி இருந்தார். இந்த வழக்கு சுப்ரீம் […]

கோவில்பட்டி

தீயணைப்பு துறை, ராணுவம் வேலைவாய்ப்பு பயிலரங்கம் 

கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின்  வணிக நிர்வாகவியல் துறை மற்றும் சீருடைப் பணியாளர்கள் பயிற்சி முகமை இணைந்து இரண்டு நாள் பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.  இந்த பயிலரங்கத்தில் கல்லூரியின் இயக்குனர்பி. மகேஷ்குமார் தலைமை உரையாற்றினார்கள். முதல் நாள் நிகழ்வாக தீயணைப்பு துறை களின் வேலைவாய்ப்புகள் பற்றி, தர்ஷன் தீயணைப்பு மற்றும் பயிற்சி கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஆர் மணிகண்டன்  சிறப்புரை ஆற்றினார். இரண்டாவது நாள் நிகழ்வாக இந்திய ராணுவத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும் அந்த […]

கோவில்பட்டி

சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் மாவட்ட ஆக்கி அணிக்கு 52 பேர்

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் மாவட்ட ஆக்கி அணி தேர்வு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று(பிப்ரவரி 26) ) காலை நடைபெற்றதுமாணவர்கள் பிரிவில் 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர் மாணவிகள் பிரிவில் 75 வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர் காளிமுத்து பாண்டி ராஜா காமராஜ் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் மாயாண்டி ஆகியோர் தேர்வு குழு  உறுப்பினர்களாக இருந்து வீரர்களை தேர்வு செய்தனர் மாணவர்கள் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை கல்விக்கடன் முகாம்: என்னென்ன கொண்டு செல்ல வேண்டும்? ஆட்சியர் இளம்பகவத்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கும் மாணவ/ மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வங்கியாளர்களை ஒருங்கிணைத்து கல்வி கடன் வழங்கும் முகாம் நாளை (27.2.2026) காலை 10 மணிக்கு தூத்துக்குடி, விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. 2024-2025-ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட உயர்கல்வி பாடப்பிரிவுகளில் இந்த கல்வி […]

செய்திகள்

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் அன்பு நகரை சேர்ந்த சிவராமன் (வயது 65) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தை சேர்ந்த 4 இளைஞர்களிடம் அறிமுகமாகி ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  மோசடி செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 4 இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு 1-ல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை […]

செய்திகள்

ஆதவ் அர்ஜுனா மாமியாருக்கு அதிமுகவில் பதவி

கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின். இவரது மனைவி லீமா ரோஸ். இவர் தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் ஆவார். லீமா ரோஸ் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணைப்பொதுச்செயலாளராக பணியாற்றி வந்தார். ஆனால், 14 ஆண்டுகளாக ஐஜேகே கட்சியில் பணியாற்றியபோதும் கட்சியின் தனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் இல்லை என்று கூறி அக்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார். இதையடுத்து, லீமா ரோஸ் கடந்த 17ம் தேதி அதிமுகவில் இணைந்தார். […]

செய்திகள்

நல்லகண்ணு உடல்  ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது

வயது மூப்பு மற்றும் உடலில் குறைவால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்ல கண்ணு இன்று ( பிப்ரவரி 25) பிற்பகல் மரணம் அடைந்தார்  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து  நல்லகண்ணுவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் தி நகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மாலை 5 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  இந்திய கம்யூனிஸ்ட் முக்கிய தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் […]

செய்திகள்

நல்லக்கண்ணு மறைவு : முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்;

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தகைசால் தமிழருமான தோழர் ஆர். நல்லகண்ணு மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: – “எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது; அதுதான் நல்லகண்ணு” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்ட மாபெரும் தலைவர் மறைவுற்ற செய்தி கடும் துயரத்தை அளிக்கிறது. நாட்டின் விடுதலைக்காகவும், பாட்டாளி […]