• June 7, 2025
கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஆக்கி: பரபரப்பான அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணிகள்; இன்று

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 01ம் தேதி வரை நடைபெற்று வருகின்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடின. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் […]

செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை வந்தார்; நாளை நடக்கும் திமுக பொதுக்குழுவில் பங்கேற்கிறார்

ஆளுங்கட்சியான தி.மு.க. மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த இருக்கிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில், 6 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். 2026 சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் […]

செய்திகள்

சேலத்தில் கொரோனா பாதித்த வாலிபர் உயிரிழப்பு

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்பின் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. இதன்படி ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவலின் தாக்கம்  தொடங்கி உள்ளது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் […]

தூத்துக்குடி

256 வது பிறந்த நாள் :வீரன் வெள்ளையத்தேவன் சிலைக்கு ஆட்சியர் இளம்பகவத் மாலை

சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் 256வது பிறந்த நாள் விழா இன்று (31.5.2025) கொண்டாடப்பட்டு வருகிறது. தீரம் மிக்க வீரன் வெள்ளையத்தேவனை வீரபாண்டிய கட்டபொம்மன் தனது  தளபதியாக மட்டுமல்லாமல் மகனாகவும் நினைத்துப் போற்றினார். வெள்ளையர்கள் வீரபாண்டியரிடம் கப்பம் கேட்டு வந்தபோது முதலில் சீறிப் பாய்ந்தது வெள்ளையத்தேவன்தான். பானர்மேன் என்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு படையெடுத்து வந்தான். போர் தொடங்கியது. வெள்ளையத்தேவன் சுழன்று சுழன்று ஆங்கிலேயர்களை வேட்டையாடிக் கொன்றான். கோட்டையை பலமாக காவல் காத்தான். […]

சினிமா

‘தக் லைப்’ திரைப்படம், கர்நாடகாவில் திரையிட தடை

நடிகர் கமல்ஹாசன், முன்னணி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ‘தக் லைப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.  இதில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் கன்னட அமைப்பினர், எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கமல்ஹாசனை கண்டித்தும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர் தனது […]

செய்திகள்

ராமதாஸ் வழிகாட்டி, பாமக தலைவர் நான்; நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி பேச்சு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். இதனிடையே கட்சி தலைவரான அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நேற்று தொடங்கினார். இரண்டாவது நாளாக இன்று நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார். […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புத்தக கண்காட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் கடந்த 21ந்தேதி புத்தக் கண்காட்சி தொடங்கியது.. ஜூன் 9ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது. புத்தக கண்காட்சிக்கு வருகை தரும் பொது மக்களுக்கு திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் முகமது பைசல்  தலைமையிலான மருத்துவ குழுவினர்  இன்று கண் பரிசோதனை செய்தனர். முகாமிற்கு புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார். கோவில்பட்டி […]

கோவில்பட்டி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை

கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக பல்வேறு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி முத்தையாமால் தெருவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நற்பணி இயக்க தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மதிமுத்து,சேகர், கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் மகேந்நிரன் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார்.நற்பணி இயக்கத்தை சேர்ந்த முத்துசாமி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் […]

செய்திகள்

கொரோனா பரவல் பற்றி பதற்றம் அடைய வேண்டாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- கொரோனா உருமாற்றம் பெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 1800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வீரியம் இல்லாத ஒமைக்ரான் வகையிலான தொற்று தற்போது பரவி வருகிறது. ஆனாலும் பெரிய பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை. ஒமைக்ரான் வகையிலான கொரோனாவால் யாரும் பதற்றம் அடைய தேவை இல்லை. பதற்றம் அடைய வேண்டியதில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகமே தெரிவித்துள்ளது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா […]

செய்திகள்

கொரோனா பரவல்: பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய அரசு அறிவுறுத்தல்

தமிழக அரசின்  பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் பரவலாக காணப்படுகிறது. எனவே மாவட்ட சுகாதார அலுவலர்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளில் ஈடுபட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக இன்புளுயன்சா உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்களை பரிமாற வேண்டும். தொற்று காணப்படும் பட்சத்தில் அதற்கான கள மருத்துவ குழு அதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது அவசியம். நோய் […]