கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு மாதமும் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. இதன் தொடர்ச்சியாக நேற்று 57 வது அன்னதானம் வேலாயுதபுரம் அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் காளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்றது. முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான லவ ராஜா அனைவரையும் வரவேற்றார். ஜீவா அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், சிவந்தி ஆதித்தனார் மன்ற தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் தர்மராஜா […]
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை விரிவாக்கம் கோரி முதலமைச்சருக்கு 1000 தபால் அட்டைகள் அனுப்பும்
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்திடக்கோரி மந்தித்தோப்பு ரோடு வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் குடியிருப்போர் சங்கங்களின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில நிர்வாக குழு உறுப்பினர் தமிழரசன் தலைமை தாங்கினார். 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்திட வலியுறுத்தி 18-7-2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு 1000 தபால் அட்டைகள் அனுப்புவது, முதலமைச்சருக்கு இ-மெயில் அனுப்புவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 30-7-2026 அன்று மந்தித்தோப்பு சாலை வியாபாரிகள் […]
தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அஸ்ட்ரானமி அன்ட் சயின்ஸ் சொசைட்டி மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ செயலாளர் முத்து முருகன்,டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சாந்தி வரவேற்றார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி& சயின்ஸ் சொசைட்டி (டாஸ்) மாநில பொதுச் செயலாளர் மனோகர் […]
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி,கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான இளையோர் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு நடந்தது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன், செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக எதிர்காலத்தை வடிவமைப்போம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இறைவணக்கத்துடன் துவங்கிய இந்நிகழ்விற்கு கல்லூரி இயக்குநர். பா.மகேஷ்குமார் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் ராஜீஸ் கல்லூரி, வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், ஏ.சுரேந்திரன் கலந்துகொண்டு மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி, தன்னம்பிக்கை, நேர மேலாண்மை, தகவல் தொடர்புத்திறன், தலைமைத்துவ பண்புகள், தொழில் திட்டமிடல், வேலைவாய்ப்பு திறன், தொழில்முறை ஒழுக்கம் மற்றும் […]
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் 316 வது பிறந்தநாள் இன்று ஜூலை 11 கொண்டாடப்பட்டு வருகிறது,.சென்னையில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைசர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காட்டலங்குளத்தில் நடைபெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில்,பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேரில் மரியாதை செலுத்தினார்கள்., பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் குவிந்ததால் இப்பகுதியில் போக்குவரத்து நெருகடி ஏற்பட்டது, திமுக துணைப் பொதுச் செயலாளரும் […]
தமிழ்நாடு நாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி -தூத்துக்குடி ஆட்சியர் அழைப்பு
தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாகச் ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள்விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப் போட்டிகள் 14.7.2026 செவ்வாய்க்கிழமை காலை 9மணிக்கு தூத்துக்குடி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் இப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டிகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு 9159668240, […]
அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதன்படி முதலில் மாநிலப் பாடல், அதைத் தொடர்ந்து தேசியப் பாடல் (வந்தே மாதரம்), இறுதியாக தேசிய கீதமும் (ஜன கண மன) .. பாடப்பட வேண்டும். தேசியப் பாடல், தேசிய கீதத்தை பாடும்போது அதன் அசல் வரிகள், சரியான உச்சரிப்பு முறைகளை துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச […]
அதிமுக முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- கரூர் சென்றுள்ள முதல்வர், வழக்கம் போல தன் வசன கர்த்தா குடுத்த Script ஐ முழங்கி தள்ளியுள்ளார். என் நெஞ்சில் நீங்காமல் இருக்கும் கரூர் மக்களை சந்திக்க போகிறேன் என்று சொன்ன முதல்வர், உண்மையில் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யவே கரூர் சென்றிருக்கிறார். மேலும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று அள்ளி தந்த கவர்ச்சி வாக்குறுதிகளை மீண்டும் ஒருமுறை வாக்குறுதியாக கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, மீண்டும், மீண்டும் […]
தவெகவில் இணையுமாறு மிரட்டியதாக புகார்: திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் போலீஸ் விசாரணை
தமிழக வெற்றிக் கழகத்தில் இணையச் சொல்லித் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறிய புகாரின் பேரில், திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தன்னைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையச் சொல்லி மிரட்டியதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாகத் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் […]







