கண்தானம் விழிப்புணர்வு வாகனபயணம்
ராம்கோ சமூக சேவைக்கழகம் மற்றும் சக்ஸம் மாற்றுத்திறனாளர் நலன் விரும்பும் தேசிய அமைப்பு இணைந்து நடத்தும் தேசிய கண்தாம்ன விழிப்புணர்வு இருவார விழாவின் ஒரு பகுதியாக மதுரை முதல் கன்னியாகுமாரி வரையிலான தென்மாவட்ட வாகன பயணம் நேற்று கோவில்பட்டி வந்தடைந்தது.
இன்று கோவில்பட்டி முதல் திருநெல்வேலி வரையிலான கண்தானம் விழிப்புணர்வு வாகன பயணத்தினை அண்ணா பஸ் நிலையம் முன்பு இருந்து பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் வீ வேல்ராஜா கொடியசைத்து தொடக்கி வைத்தார். ஏற்பாடுகளை சக்ஸம் மாவட்ட செயலாளர் பழனிசாமி செய்திருந்தார்.