• April 30, 2024

கோவில் கொடை விழாவில் திருவிளக்கு பூஜை

 கோவில் கொடை விழாவில்  திருவிளக்கு பூஜை

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் புற்றுக்கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நேற்று நடைப்பெற்றது.
இதனையொட்டி மாலை 5 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி கோவில் திருவிளக்கு அலங்கரிக்கப்பட்டு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை தீபாராதனை காட்டப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது
பூஜைகளை சங்கரேஸ்வரி கோவில் அய்யர் சுப்பிரமணியன், காளியம்மன் கோவில் பூசாரி சுப்புராஜ், கார்த்திக் ஆகியோர் செய்தனர். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன் , கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *