• May 19, 2024

கழுகுமலை கொடிமரத்து பேச்சியம்மன் கோவில் கொடை விழா; நாளை தொடங்குகிறது

 கழுகுமலை கொடிமரத்து பேச்சியம்மன் கோவில் கொடை விழா; நாளை தொடங்குகிறது

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு பாத்தியப்பட்ட கொடிமரத்து பேச்சியம்மன் மற்றும் அண்ணா கீழத் தெருவில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் கொடை விழா நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
கொடை விழாவை முன்னிட்டு நாளை காலை கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 3-ந்தேதி காலையில் காப்புக்கட்டுதல், 5-ந் தேதி அண்ணா கீழத் தெருவில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் முன்பு விளக்கு பூஜை நடைபெறுகிறது.
6-ந் தேதி மாலை 5 மணிக்கு அம்மன் ஊர் விளையாடல் அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ந் தேதி காலை 10 மணிக்கு பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு வானவேடிக்கை உடன் மாவிளக்கு ஊர்வலம் நடைபெறுகிறது.
8-ந் தேதி மதியம் 3 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. 9-ந் தேதி சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *