• May 19, 2024

பெட்டிக்கடையில் குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது

 பெட்டிக்கடையில் குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது

கயத்தாறு பஜாரில் ராஜாபுதுக்குடியை சேர்ந்த ஒரு சிறுவன் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளை பயன்படுத்துவதை ரோந்து சென்ற போலீசார் கண்டு பிடித்தனர். சிறுவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட பெட்டிக்கடையில் புகையிலை பொருளை வாங்கியதாக தெரிவித்தான்.
அந்த பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். கடையில் சோதனை நடத்தியதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட 30 கிலோ குட்கா மற்றும் 58 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடை ஊழியர்களான உச்சினிமாகாளி(வயது 37), மணிகண்டன்(30), சுடலைமணி( 27) ஆகியோரை கைது செய்தனர
விசாரணையில் பெட்டிக்கடையில் வைத்து குட்கா மற்றும் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. மேலும் அந்த கடையிலேயே மது வாங்கி அங்கேயே குடித்து செல்லும் பார் போல் பயன்படுத்தியதாகவும் சொல்லபடுகிறது.
அவர்களுக்கு மது பாட்டில்கள் மற்றும், குட்கா சப்ளை செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *