கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது; குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கணிசமாக விழுகிறது
Oplus_16908288
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று ஜூன் 6 தொடங்கியது. அதன் தாக்கத்தால் தமிழகத்தின் எல்லையோரப் பகுதியான தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து கணிசமாகத் தொடங்கியுள்ளது.

வழக்கமாக மே மாத இறுதியிலேயே தொடங்க வேண்டிய இந்த பருவமழை, இந்த ஆண்டு சில நாட்கள் தாமதமாகத் தொடங்கினாலும், தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத் தொடங்கியிருப்பது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது;
இருப்பினும், மெயின் அருவி பகுதியில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத காரணத்தாலும், தற்போதைய மழையினால் அப்பணிகள் மேலும் தடைபட்டுள்ளது
.

இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் மட்டும் குளிப்பதற்குப் பொதுமக்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது







