சட்டசபை தேர்தல்: 14 அமைச்சர்களுடன் மோதும் அதிமுக கூட்டணி கட்சிகள்
நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் 14 அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சிகள் களம் காண்கின்றன,
அதாவது 14 தொகுதிகளில் தி.மு.க. அமைச்சர்களை எதிர்த்து போட்டியிடுவதை அ.தி.மு.க. தவிர்த்துள்ளது.
அந்த வகையில், அமைச்சர்கள் எ.வ.வேலு (திருவண்ணாமலை), பெரியகருப்பன் (திருப்பத்தூர்), மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம்), நாசர் (ஆவடி), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), மதிவேந்தன் (ராசிபுரம்) ஆகியோர் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் தொகுதிகள் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அமைச்சர்கள் கே.என்.நேரு (திருச்சி மேற்கு), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை) ஆகியோர் எம்.எல்.ஏ.வாக உள்ள தொகுதிகள் அ.ம.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர்கள் அர.சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்), முத்துசாமி (ஈரோடு மேற்கு), ஆர்.காந்தி (ராணிப்பேட்டை) ஆகியோர் எம்.எல்.ஏ.வாக உள்ள தொகுதிகள் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அமைச்சர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வாக உள்ள சேலம் வடக்கு தொகுதி பா.ம.க.வும், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எம்.எல்.ஏ.வாக உள்ள குன்னம் தொகுதி இந்திய ஜனநாயக கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.








