• March 11, 2026

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது ;கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

 கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது ;கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

இயேசு கிறிஸ்து சிலு​வை​யில் அறைந்து கொல்​லப்​பட்டு 3-ம் நாள் உயிர்த்​தெழுந்​த​தாக கிறிஸ்​தவர்​களின் புனித நூலான பைபிளில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. ஏசு உயிர்த்​தெழுந்த தினத்தை உலகெங்​கும் வாழும் கிறிஸ்​தவர்​கள் ஈஸ்​டர் பண்​டிகை​யாக கொண்​டாடு​கிறார்​கள்.

ஈஸ்​டர் பெரு​விழாவுக்கு முந்​தைய 40 நாட்​கள் தவக்​கால​மாக​வும், அதன் முதல் நாள் சாம்​பல் புதன்​கிழமை​யாக​வும் அனுசரிக்​கப்​படும். இந்த 40 நாள் தவக்​காலத்​தில் கிறிஸ்​தவர்​கள் மீன், இறைச்​சி, முட்டை முதலான அசைவ உணவு​களை தவிர்த்து விடு​வார்​கள்.

 அத்​துடன், வீடு​களில், திரு​மணம், புது​மனை புகு​விழா என எந்த வித​மான கொண்​டாட்ட நிகழ்​வு​களை​யும் நடத்த மாட்​டார்​கள்.

இயேசுவின் சிலு​வைப்​பாடு​களை நினை​வு​கூரும் வண்​ணம் தவக்​காலத்​தின்​போது ஒவ்​வொரு வெள்​ளிக்​கிழமை​யும் கத்​தோலிக்க தேவால​யங்​களில் சிலு​வைப்​பாதை வழி​பாடு நடை​பெறும். அது​மட்​டுமின்​றி, ஒவ்​வொரு ஆலயத்​தில் இருந்​தும் இறைமக்​கள் ஒரு குழு​வாக சேர்ந்து முக்​கிய​மான ஆலயங்​களுக்கு திருப்​பயணம் மேற்​கொள்​வர்.

இந்த ஆண்டு ஈஸ்​டர் பண்​டிகை ஏப்ரல் 5-ம் தேதி கொண்​டாடப்பட உள்​ளது. எனவே, அதற்கு முந்​தைய 40 நாட்​கள் தவக்​கால​மாக அனுசரிக்​கப்​படும். 

அந்த வகை​யில், தவக்​காலம் சாம்​பல் புதன்​கிழமை​யுடன் இன்று (18-ம் தேதி) தொடங்​கியது. இதையொட்​டி, தேவால​யங்​களில் சிறப்பு திருப்​பலி​யும், சிறப்பு ஆராதனை​யும் நடை​பெற்றது.

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் தவக்கால முதல் நாளான இன்று காலை 6 மணிக்கும், மாலை 6.30 மணிக்கு திருத்தல பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளார், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். 

பின்னர் கடந்த ஆண்டு குருத்தோலை பவனியில் கிறிஸ்துவமக்கள் பயன்படுத்திய குருத்தோலைகளை சேகரித்து ஆலயத்தில் வைத்து எரித்து சாம்பலாக்கி அந்த சாம்பலால் கிறிஸ்துவமக்கள் நெற்றியில் அருட்தந்தையர்கள் “மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் எனும் இறைவார்த்தையை கூறி சிலுவை அடையாளமிட்டனர்.

தவக்காலம் தொடர்ந்து 40 நாட்கள் அனுசரிக்கப்படும். இந்நாட்களில் ஆலயங்களில் சிலுவைப் பாதையும், திருப்பலியும், தவக்கால நடை பயணங்களும் நடைபெறுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *