கல்லூரி மாணவ மாணவிகளுக்கான ஒலியியல் விழிப்புணர்வு திட்டம் நிகழ்ச்சி
கோவில்பட்டி கோ வெங்கடசாமி நாயுடு கல்லூரி ஆங்கிலத் துறை சார்பில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒலியியல் விழிப்புணர்வு திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
துறைத் தலைவர் சு.து.செல்வசுந்தரி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஆங்கிலத்துறையின் முன்னாள் மாணவி, கா. தேன்மொழி, (பீ லேர்னிங் நிறுவனர்) கலந்து கொண்டார்.

மாணவர்களுக்கு ஆங்கில மொழி ஒலியியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இணையவழி வழியாக ஒலியியல் கற்பிக்கும் பணி வாய்ப்பு குறித்து உ ரை நிகழ்த்தினார்.
தொடக்கத்தில் ஆங்கிலத்துறை மூன்றாம் ஆண்டு மாணவர் மகேந்திரன் வரவேற்று பேசினார். மாணவி பிரதீபா நன்றி கூறினார்.
ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் சிவசங்கரி, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.







