• March 6, 2026

கோவில்பட்டி: கார்கள் மோதல்: 2 பேர் பலியான பரிதாபம்

 கோவில்பட்டி: கார்கள் மோதல்: 2 பேர் பலியான பரிதாபம்

Oplus_16908288

 திருநெல்வேலி என் ஜி ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). இவரது மனைவி கவிதா(55). இருவரும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விபத்து ஒன்றில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்துவிட்டு காரில் ஊருக்கு திரும்பினர்.

காரை |முத்துக்குமார் என்பவர் ஓட்டினார். 

கோவில்பட்டிஅருகே தேசிய நெடுஞ்சாலையில் பெத்தேல் பகுதியில் நள்ளிரவில் சென்றபோது, திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சென்டர் மீடியன் பகுதியை தாண்டி இவர்கள் கார் மீது மோதி சுமார் 250 மீட்டர் தூரம் அந்த கார் இழுத்துச் செல்லப்பட்டது.விபத்தில் 2 கார்களும் நொறுங்கின.

இதில் டிரைவர் முத்துக்குமார் சம்பவ இடத்தில்பரிதாபமாக உயிரிழந்தார். ராதாகிருஷ்ணன் அவரது மனைவி கவிதா, விபத்துக்குள்ளான மற்றொரு காரில் பயணித்த திருநெல்வேலி வடக்கூரைச் சேர்ந்த மந்திரமூர்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர்  காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராதா

கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த கவிதா மற்றும் மந்திர மூர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *