டிக் டாக்” இலக்கியா குற்றச்சாட்டு: ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் விளக்கம்
டிக்டாக் மூலம் பிரபலமான இலக்கியாவுக்கு சமூகவலைதளங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் மகன் திலீப் சுப்புராயன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறி இன்ஸ்டா ஸ்டோரியில் இலக்கியா பதிவிட்டுள்ள விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
இன்ஸ்டா ஸ்டோரியில் இலக்கியா “”என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதைக்கேட்ட என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து… என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஸ்டோரியில் திலீப் சுப்பராயனின் போட்டோவையும் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட் வைரலானது. இந்த நிலையில் நேற்று, அதிக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இலக்கியா ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மீது குற்றம் சாட்டியுள்ளார். சில மணி நேரத்தில் தனது குற்றச்சாட்டு பதிவுகளை நீக்கிவிட்டு, ‘ஆல் ஆர் பேக் நியூஸ்’ என்று மாற்றியுள்ளார் இலக்கியா.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள திலிப் சுப்பராயன், தனது பெயரை குறிப்பிட்டு இலக்கியா பகிர்ந்திருந்தது பொய்யான தகவல் என குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீதான காழ்ப்புணர்ச்சியால் இதை யாரோ செய்கிறார்கள். இந்த விவகாரத்தை நான் சட்டப்படி சந்திப்பேன். இலக்கியா தற்கொலை முடிவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபரே அப்பதிவை அழித்துவிட்டு, பொய்ச்செய்தி என விளக்கம் அளித்துள்ளதாகவும் திலீப் சுப்பராயன சுட்டிக்காட்டியுள்ளார். தன்னை பற்றி பொய்யான தகவல் பரவி வருவதாக கூறியுள்ள அவர், இதனால் தானும் தனது குடும்பத்தாரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.







